Two arrested near cuddalore for dog hunting

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அரியகோஷ்டியைச் சேர்ந்த முத்துவேல் (30), அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (34) ஆகிய இருவரும், தங்கள் வசிக்கும் பகுதியில் பல நாட்களாக தெருநாய் ஒன்று இடையூறு செய்துவந்ததை அடுத்து, கடந்த 18-05-2021 அன்று மாலை நாயைக் கயிற்றால் மாட்டி தூக்கில் தொங்கவிட்டு அதைப் புகைப்படங்கள் எடுத்து முகநூலில் பதிவேற்றியுள்ளனர். இதுகுறித்து மஞ்சகுப்பம் பகுதியைச் சேர்ந்த செல்வா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் பரங்கிப்பேட்டை காவல்துறையினர் மிருகவதைச் சட்டத்தின் கீழ் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்தனர்.

Advertisment