Skip to main content

கிஸான் திட்ட முறைகேட்டில் பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது: சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை...

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

Two arrested, including BJP executive, in Kisan scheme

 

 

தமிழகம் முழுவதும் விவசாயிகள் அல்லாத நபர்கள் மத்தியரசின் கிஸான் திட்டத்தில், போலியான விவசாயிகளை சேர்த்து ஒவ்வொருவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நிதி பெற்றுள்ளனர். இப்படி ஆயிரக்கணக்கான போலி விவசாயிகளை இணைத்து நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இந்த திட்டத்தில் மோசடி நடத்தியுள்ளனர். இந்த மோசடியில் வேளாண்மைத்துறை அதிகாரிகள், தற்காலிக பணியாளர்கள், கணிப்பொறி மையத்தினர், பெண்கள் அமைப்பினர், அரசியல் கட்சியினர் ஈடுப்பட்டுள்ளனர். இந்த மோசடி தமிழகத்தில் வெளிவந்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்றுவருகிறது.

 

வேலூர் மாவட்டத்தில் 3,242 பேர் விவசாயிகள் என பதிவு செய்து மோசடி செய்துள்ளனர். இவர்கள் மோசடி செய்த தொகை ரூ.1 கோடியே 23 லட்சம். அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,687 பேர் முறைகேடாக போலி விவசாயிகள் பெயரில் 80 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி முறைகேடு செய்துயிருப்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

 

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் மற்றும் கணினி மைய உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட ஜோலார்பேட்டையை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாகவுள்ள கண்மணி, ஜோலார்பேட்டையில் கணினி மையம் வைத்துள்ள ஜெகன்நாதனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

100வது உழவர் ரயில் - இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! 

Published on 28/12/2020 | Edited on 28/12/2020
modi ji

 

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் 33 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த தயார் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

 

இந்தநிலையில், 100வது உழவர் ரயில் (கிசான் ரயில்) சேவையை இன்று மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கவுள்ளார் பிரதமர் மோடி. மகாராஷ்டிராவில் சங்கோலா மற்றும் மேற்கு வங்கத்தின் ஷாலிமார் இடையே இந்த நூறாவது உழவர் ரயில் இயங்கவுள்ளது 

 

விவசாய விளைபொருட்களை ஏற்றி செல்லும் இந்த உழவர் ரயில் சேவை, முதன்முதலில் மகாராஷ்டிராவின் தேவலாலி மற்றும் பீகார் மாநிலத்தின் தனபூர்  இடையே ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இதனை தொடங்கி வைத்தார். அதன் பிறகு படிப்படியாக இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு இன்று நூறாவது உழவர் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த ரூபாய் 123 கோடி மீட்பு!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020

 

pm kisan scheme tamilnadu farmers rs 123 seized

தமிழகத்தில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் வங்கிக்கணக்கை முடக்கி, பணத்தை மீட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட செயலாக்கப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (24/10/2020) நடைபெற்றது. தமிழக வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம், இணை இயக்குனர் வேலாயுதம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் பேசிய தமிழக வேளாண்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, "வேளாண் துறையால் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மக்காச் சோளம் பயிரிடப்பட்டு படைபுழு தாக்கம் அதிகம் உள்ளதால் அவை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

மேலும் உணவு தானிய உற்பத்தி சொட்டுநீர் பாசன திட்டம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும். தமிழகத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து இதுவரை 123 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு லட்சம் பேரிடம் இருந்தும் பணத்தை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது."இவ்வாறு தட்சிணாமூர்த்தி கூறினார்.

 

தமிழகத்தில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக, அரசு ஊழியர்கள், அரசு உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.