Skip to main content

திருச்சியில் உடும்பு வேட்டையாடிய இருவர் கைது

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

Two arrested for hunting iguana trichy

 

திருச்சி வன சரக அலுவலர்  கோபிநாத்  தலைமையிலான தனிக்குழுவினர், லால்குடி - குமுளூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப் படும்படியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவர்களிடம் இறந்த நிலையில் உடும்பு ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் வயல்வெளியில் கண்ணி வைத்து வேட்டையாடி எடுத்து வந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து, உடும்பு வேட்டையாடிய சின்ராசு, திருமலை ஆகிய அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் 1, கண்ணிகள் 10, அலைபேசி 2 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்