Skip to main content

போலி மதுபானம் கடத்திய இருவர் கைது-பண்ருட்டி பகுதியில் கஞ்சா விற்ற 9 பேர் கைது!

Published on 29/08/2021 | Edited on 29/08/2021

 

Two arrested for  fake liquor - 9 arrested for selling cannabis in Pantrudi area!

 

புதுச்சேரி மாநித்திலிருந்து தமிழகப் பகுதியான கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளுக்கு தமிழக அரசு லேபிள்கள் ஒட்டிய போலி மதுபானங்கள் அடிக்கடி கொண்டு வருவதாக கடலூர் மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவின் பேரில், மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் ஆய்வாளர்களுடன் 2 நாட்களாக பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  

 

நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடலூர்  கஸ்டம்ஸ் சாலை வழியாக பண்ருட்டி நோக்கி ஸ்கார்பியோ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதை மதுவிலக்கு போலீசார் மறித்து சோதனை செய்தபோது, அதில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் லேபிள்கள் ஒட்டிய போலி மதுபாட்டில்கள் 25-க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டிகளில் 1,450 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.  மேலும் அதனுடன் 100 லிட்டர் கள்ளச்சாராயமும் இருந்தது.

 

அதையடுத்து மதுவிலக்கு போலீசார் பண்ருட்டி மதுவிலக்கு பிரிவுக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் போலி மதுவை கடத்தியது திருக்கோவிலூரை சேர்ந்த குமார், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த சுதாகர் என தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான போலி மதுபானங்கள், 100 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் காரையும் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

இதேபோல் பண்ருட்டி அருகில் புதுப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் அதிகளவில் இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருவது காவல்துறைக்கு தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து பண்ருட்டி, புதுப்பேட்டை பகுதியில் போலீசார் தீவிர கஞ்சா வேடையில் ஈடுபட்டனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நடத்திய கஞ்சா வேட்டையில் ஒறையூர் கணேஷ் (22), கரும்பூர்குச்சிபாளையம் அருண் (21) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கஞ்சா வியாபாரியான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அன்றாயநல்லூர் அண்ணா நகர் குப்பன் (61) என்பவனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதேபோல பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் தீபன் ஆகியோர் நடத்திய கஞ்சா வேட்டையில் பண்ருட்டி திருவள்ளுவர் நகர் தனபால் (45), மாளிகைமேடு காலனி கோலியனூரான்(61), ராஜ்கண்ணு(47), எம்.புதுப்பாளையம் மண்ணாங்கட்டி (72), வீரப்பன்(50) ஆகியோர் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

முத்தாண்டிக்குப்பம் பகுதியில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வன் ஆகியோர் நடத்திய வேட்டையில் முடப்பள்ளி காலனி அன்பு (36) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பண்ருட்டி பகுதியில் கடந்த 10 நாட்களில் ஏராளமான கஞ்சா ஆசாமிகள் கைதாகி சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.