Two arrested on the basis of confidential information

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சி.மேலவன்னியூர் கிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக புவனகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் போலீசார் சி.மேலவன்னியூர் பகுதியில் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisment

அப்போது அங்கு மறைவான இடத்தில் வைத்து அதே ஊரைச் சேர்ந்த சிவஞானம், முரளி ஆகிய இருவர் சாராய ஊறல் போட்டு அதனைக் காய்ச்சிக்கொண்டிருந்ததைக் கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தைக் கைப்பற்றி, அவர்கள் வைத்திருந்த சாராய ஊறலையும் கீழே கொட்டி அழித்தனர்.