ட்விட்டர் நிறுவனத்தின் கொள்கையை மீறி, உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் வகையில் செயல்பட்டு வந்த 88 ஆயிரம் ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
இதி்ல் 6 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் குறித்த தகவல்களை மட்டுமே வெளிட்டுள்ள அந்நிறுவனம், தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், 88 ஆயிரம் ட்விட்டர் கணக்குகளும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஸ்மாட் என்ற நிறுவனத்தால் இயக்கப்பட்டதாக தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.