Skip to main content

“அம்மாவ பாரு பாப்பா உன்ன வீடியோ எடுக்குறாங்க பாரு பாப்பா....”- மருந்தில்லாததால் உயிரிழந்த குழந்தை

Published on 23/09/2022 | Edited on 23/09/2022

 

twins passed away in hospital; mom who cry


திருபத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம் செலந்தம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அருண். இவருக்கும் இவரது மனைவிக்கும் நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. குழந்தைகள் எடை குறைவாக இருப்பதாக கூறி கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

 

எனினும் மூன்று தினங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை இறந்த நிலையில் மற்றொரு பெண் குழந்தைக்கு சிகிச்சை தொடர்ந்து வந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கையில் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இந்த விவரத்தை அறிந்த செய்தியாளர்கள் செய்தியை சேகரிக்க அங்கு சென்றனர். அப்போது இறந்த அக்குழந்தையின் தாய், “பாப்பா அம்மாவ பாரு பாப்பா. உன்ன வீடியோ எடுக்குறாங்க பாரு பாப்பா” என்று கதறி அழுதார். இது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.

 

குழந்தைகளிம் தந்தை கூறுகையில், “குழந்தைங்க நல்லா இருக்குதுனு சொல்லியே ஒரு மாசமா இங்கயே இருந்ததுங்க.  அப்பப்போ ஒரு ஊசி 1000 ரூபாய்க்கு வாங்கி கொடுத்தும் காப்பாத்த முடியல. முப்பதாயிரத்துக்கு ஊசி வாங்கி கொடுத்தும் ரெண்டு குழந்தைங்களும் இறந்துடுச்சு. இன்னைக்கு காலைல 10 மணிக்கு ஒரு குழந்த நல்லா இருக்குனு டாக்டர் வந்து சொன்னாரு. சாயந்தரம் 5 மணிக்கு குழந்த இறந்துடுச்சுனு என் மனைவி கிட்ட சொல்லி இருக்காங்க. இதுக்கு அரசு ஒரு நடவடிக்கை எடுக்கனும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Village cooking channel put an end to rumours

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனலில் வரும் சமையல் வீடியோவில் ‘இன்னைக்கு ஒரு புடி’என்ற வசனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் பெரியதம்பி தாத்தா. இவர் சமீபத்தில் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வில்லேஜ் குக்கிங் சேனல் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் வில்லேஜ் குக்கிங் சேனலில் தோன்றும் தாத்தாவின் மருத்துவ செலவுக்கு உதவ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மறுத்துவிட்டார் என பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த வதந்தியை சுப்ரமணியன் வேலுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் வதந்தியாக பரப்பப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்!. எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது!.

இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சித் தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது கிராமத்துச் சூழலில் ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து சாப்பிட்ட வீடியோ மக்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.