Skip to main content

குட்டையில் மூழ்கி இரட்டை குழந்தைகள் பலி; பொங்கலன்று சோகத்தில் மூழ்கிய கிராமம்! 

Published on 16/01/2022 | Edited on 16/01/2022

 

Twin children drowned in puddle; Village immersed in tragedy on Pongal!
மாதிரி படம் 

 

ஆத்தூர் அருகே, பெற்றோரின் கவனக்குறைவால் பொங்கலன்று குட்டை நீரில் மூழ்கி இரட்டைக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், ஒட்டுமொத்த கிராமத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை குப்பனூரைச் சேர்ந்தவர் தமிழரசன் (32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு 3 வயதில் துளசி ராமன், துளசிதரன் என இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 14), சமையலுக்குத் தேவையான விறகுகளை சேகரித்து வருவதற்காக தமிழரசனும், அவருடைய மனைவியும் தங்கள் குழந்தைகளுடன் அருகில் உள்ள மீன் வளர்ப்பு குட்டை பகுதிக்குச் சென்றனர். 

 

குட்டையின் அருகே குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு தம்பதியினர் விறகு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று குழந்தைகள் இருவரும், கெடுவாய்ப்பாக குட்டைக்குள் தவறி விழுந்தனர். இச்சம்பவம் குறித்து எதுவுமே அறியாத தம்பதியினர் விறகுகளை பொறுக்கிக்கொண்டு, குழந்தைகளை விட்டுச்சென்ற இடத்திற்கு வந்து பார்த்தனர். அங்கே அவர்களைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். 

 

குட்டைக்குள் விழுந்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில் உள்ளூர்க்காரர்களை அழைத்து வந்து குட்டைக்குள் இறங்கி தேடிப்பார்த்தனர். அப்போது குழந்தைகள் இருவரும் குட்டை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இரட்டைக்குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டன. தங்களின் கவனக்குறைவால் இரட்டைக் குழந்தைகளை இழந்து விட்டோமே என்று பெற்றோர் கதறி அழுதனர். பொங்கலன்று நடந்த இந்த சம்பவம் அந்த கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

இதுகுறித்து கருமந்துறை காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.