Skip to main content

இரண்டாவது முறையாக தேனிக்கு வந்த இருபது வாக்கு மிஷின்கள்

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

கடந்த 18ம் தேதி தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளோடு 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் தேனி பாராளுமன்ற தொகுதியோடு ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்தநிலையில்தான் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் மற்றும் பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட வடுகபட்டியிலும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

 

pallavi


அதன்படி வருகிற 19ம் தேதி அந்த இரண்டு தொகுதிகளில் உள்ள இரண்டு பூத்களிலும் மறு வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதற்காக ஏற்கனவே 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அதற்கு திமுக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வேட்பாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கம் அளித்ததின் பேரில் எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் மீண்டும் திருவள்ளுர் நுகர்வோர் வாணிப கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இருபது ஓட்டு பதிவு மிஷின்கள், இருபது விவிபேட் ஆகியவை ஒரு வேனில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேனி தாலுகா அலுவலகத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது.

 

vote


இந்த விஷயம் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான பல்லவி பல்தேவ் காதிற்கு எட்டியதன் பேரில் உடனடியாக தாலுகா அலுவலகத்திற்கு விரைந்து அந்த ஓட்டுப் பெட்டிகளை ஆய்வு செய்தார். அதுபோல் எதிர்க்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் தாலுகா அலுவலகத்திற்கு வந்து அந்த இருபது ஓட்டுப் பெட்டிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த கலெக்டருடன் அதிகாரிகளும் சேர்ந்து ஒவ்வொரு பெட்டிகளாக திறந்து எதிர்க்கட்சிகாரர்களிடம் காண்பித்தனர்.
 


இது சம்மந்தமாக எதிர்க்கட்சிகாரர்களிடம் கேட்டபோது, தேனி தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள பாலசமுத்திரம், பெரியகுளம் தொகுதியில் உள்ள வடுகபட்டி ஆகிய இரண்டு வாக்குச்சாவடி மையத்தில் மட்டும் வருகிற 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்காக ஏற்கனவே 50 ஓட்டு மிஷின்கள் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும்போது மேலும் 20 ஓட்டு மிஷின்கள்  திடீரென கொண்டுவரப்பட்டிருப்பது எங்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு ஓட்டு மிஷின் மற்றும் விவிபேட் போதுமானது. எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் உபரியாக ஒன்று அல்லது இரண்டு இயந்திரம் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்பாகவே இதுபோல ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மொத்தமாக வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
 

ஏற்கனவே ஓபிஎஸ்  தரப்பு தோல்வி ரீதியில் ஓட்டுப் பெட்டியை மாற்றும் முயற்சியில் தான் ஐம்பது ஓட்டு மிஷின்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். அதற்கே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டும், தாலுகா அலுவலகம் முன்பு காவல் காத்து கொண்டும் இருக்கிறோம். அப்படி இருக்கும்போது மீண்டும் இருபது ஓட்டு மிஷின்களை கொண்டு வந்து இருப்பது எங்களுக்கு பல சந்தேகங்களை கிளப்பி வருகிறது. ஓபிஎஸ் தனது அதிகார பண பலம் மூலம் எப்படியும், மகனை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓட்டுப் பெட்டிகளை எந்த வகையிலும் மாற்ற முயற்சி செய்யலாம் அதற்காகத்தான் தொடர்ந்து ஓட்டு மிஷின்கள் வந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை எங்களை மீறி ஓபிஎஸ் கனவு பலிக்காது தொடர்ந்து வாக்குப் பெட்டிகளை கண்காணித்துக் கொண்டுதான் வருவோம். அதுபோல் தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சியின் அதிகாரத்திற்கு அடிபணியாமல் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று கூறினார்கள். ஆக இரண்டாவது முறையாக தேனிக்கு திடீரென வாக்குப்பெட்டி வந்து இறங்கியதன் மூலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.