தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சுங்கச்சாவடியை தாக்கிய வழக்கில் அவர் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
புழல் சிறையில் இருந்த அவர் அங்கு உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமானது. மேலும் அவர் சிறுநீரக தொற்றாலும் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.