Skip to main content

பண்ருட்டியில் த.வா.க. பிரமுகர் கொலை! சில மணி நேரங்களில் குற்றவாளிகளை பிடித்த காவல்துறை!

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

TVK guy murdered.... police taken action

 

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை எடப்பாளையம் தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார்(22). தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகரான இவர் நேற்று முன்தினம் (05.09.2020) இரவு வீட்டில் இருந்து கடைவீதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மண்டபம் பஸ் நிறுத்தம் அருகே 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி பலமாக கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கடலூர் எஸ்.பி ஸ்ரீஅபிநவ், பண்ருட்டி டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் ஆகியோர் உத்தரவின் பேரில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பயிற்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி, இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையில் தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடினர்.

 

தட்டாஞ்சாவடியில்  கொலையாளிகள் தப்பிச்செல்ல முயன்றபோது கொலையாளிகள் ஞானவேல்(21),  குமரன்(21), கோபிநாத் (22), விஜயகுமார் (23), பிரகாஷ் (20), பிரதீப் (20) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம்  மற்றும் ரத்தக்கறை படிந்த ஆடைகளை கைப்பற்றினர்.

 

கைது செய்யப்பட்டவர்களுள்  ஞானவேல் என்ற  வாலிபர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், "சாந்தகுமாரின் உறவினர் சக்திவேல் என்பவர் எனது தங்கையை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்து விட்டார். எனது சகோதரியை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் சக்திவேல் ஏமாற்றியதற்கும், எனது சகோதரியின் திருமணம் நடைபெறாமல் தடைபட்டதற்கும் காரணமாக இருந்த சாந்தகுமாரை கொலை செய்ய திட்டம் போட்டோம். மண்டபம் பஸ் நிறுத்தத்தில் எனது நண்பர்களுடன் காத்திருந்தேன். அப்போது அங்குவந்த சாந்தகுமாரை சரமாரியாக தாக்கினோம். மயங்கி விழுந்த உடன் தப்பி ஓடிவிட்டோம். போலீஸ் எங்களை தேடுவதை அறிந்து வெளியூர் தப்பிச்செல்ல முயன்றபோது தட்டாஞ்சாவடி பகுதியில் போலீசார் எங்களை கைது செய்தனர்" என  கூறியுள்ளார்.

 

கொலை நடந்த சில மணி நேரங்களில் கொலையாளிகளை கைது செய்த பண்ருட்டி போலீஸ் போலீசாருக்கு கடலூர் எஸ்.பி ஸ்ரீஅபிநவ், டி.எஸ்.பி.பிரபு பிரசாந்த் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.