'சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி'- தமிழக அரசு!

tv  series shooting permission tamilnadu government

ஃபெப்சி தொழிலாளர்கள், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் நாளை (22/05/2020) முதல் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் (Indoor shooting only) சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு (Containment Zones) இது பொருந்தாது.

பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. எனினும் ஊரக பகுதிகளில் (தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர- Except containment zone) பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை ஏதும் இல்லை. பார்வையாளர்களைக் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.

படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும், பின்பும் கண்டிப்பாக கிருமி நாசினியால் (Disinfectant) சுத்தம் செய்ய வேண்டும். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் (Mask) அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் (Social Distancing) கடைப்பிடிக்க வேண்டும். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பின் இடைவெளியின்பொழுது (Breaks) தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்.

tv  series shooting permission tamilnadu government

படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமிநாசினி (Hand Sanitizer) கொண்டு கைகளை சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அதேபோன்று, படப்பிடிப்பிற்கு உபயோகப்படுத்தப்படும் கேமிரா மற்றும் கிரேன் உட்பட அனைத்து சாதனங்களையும் கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையோ அல்லது தொழிநுட்பப் பணியாளர்களையோ படப்பிடிப்பு வளாகங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு (Medical Test) அனுப்ப வேண்டும்.

http://onelink.to/nknapp

அதிகபட்சமாக நடிகர் மற்றும் நடிகை தொழில்நுட்பப் பணியாளர்கள் உட்பட 20 எண்ணிக்கைகளுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம். சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்குச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் முன் அனுமதி பெற வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்துக் கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus lockdown tn govt tv series shooting
இதையும் படியுங்கள்
Subscribe