Skip to main content

டிவி நேரலையில் மூழ்கிய பெற்றோர்... தண்ணீரில் மூழ்கி குழந்தை பரிதாப பலி

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

 

சுர்ஜித் வருவானா என்று டிவி நேரலையை பரபரப்பாக பார்த்துக்கொண்டிருந்த பெற்றோருக்கு, தனது இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியானது தாமதமாக தெரிய வந்து கடும் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Water -



திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25ஆம் தேதி இரண்டு வயது குழந்தை சுர்ஜித் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கினான். சுர்ஜித்தை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் நடந்தது. நடுக்காட்டுப்பட்டியில் நடக்கும் முயற்சிகள் தொடர்பாக தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட்டது. 
 

இந்த நேரலையை தமிழகமே பார்த்துக்கொண்டிருந்தது. தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் - நிஷா தம்பதியினர். இவர்கள் இருவரும் திங்கள்கிழமை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித்தை மீட்கும் பணி பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களது இரண்டு வயது மகள் ரேவதி சஞ்சனா அவர்களுடன் இருந்திருக்கிறாள்.
 

சற்று நேரத்தில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, திடீரென காணவில்லை. சத்தம் வரவில்லை என நிஷா தேடியுள்ளார். லிங்கேஸ்வரனும் தேடியுள்ளனர். 

 

அப்போது குளியல் அறையில் உள்ள தண்ணீர் டிரம்மில் குழந்தை தவறி விழுந்திருந்தது தெரிய வந்தது. பின்னர் இருவரும் பதறிப்போய் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அங்கு குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.