65 பேருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதி மறுப்பு...

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி 65 பேருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதி மறுப்பு.

tuticorin

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மே 22 ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது 13 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் பலர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் 65 பேரை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி சாருஹாசினி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி சாருஹாசினி 65 பேரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார்.ஜாமினில் விடுதலை செய்யும் போது அரசுதரப்பில் எந்த விளக்கமும்கேட்கவில்லை.

இதனையடுத்து அரசுதரப்பில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் 65 பேரின் ஜாமீன் உத்தரவை ரத்து செய்யகோரி மனுதாக்கல் செய்யபட்டது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்த மனு இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்த போது

"தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி 65 பேருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய நீதிபதி மறுத்தார்.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யபட்டு விசாரணையின் போது 65 பேரிடம் மாவட்ட நீதிதுறை நடுவர் பெற்ற வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

serlite protest arrest Sterlite sterlite protest Thoothukudi Tuticorin
இதையும் படியுங்கள்
Subscribe