Skip to main content

கமிசன் தராததால் பட்டதாரி வாலிபரைக் கொன்ற அமமுக நகர செயலாளர்!

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

 

 

      பஞ்சாயத்து அலுவலகம் மூலம் நடக்கும் ஒப்பந்தப் பணிகளில் ஆளுங்கட்சிக்குக் கொடுப்பது போல் தனக்கும் கமிசன் வேண்டும் என பஞ்சாயத்து பெண் ஊழியரை நிர்ப்பந்தித்த பிரச்சனையில், பட்டதாரி வாலிபரை அடித்தேக் கொன்றார் அமமுக நகர செயலாளர் ஒருவர்.

 

ax

 

 தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணி செய்துவருபவர் உத்திரக்கனி. சமீபத்தில் இவருடைய கணவர் தங்க மாரியப்பன் இறந்துவிட, தன்னுடைய மூன்று மகன்களோடு வசித்து வருகின்றார். அதே வேளையில் அமமுக கட்சியின் புதியம்புத்தூர் ந.செ-வாக இருக்கும் பெஸ்கிராஜா, " பஞ்சாயத்தில் என்னென்ன வேலைகள் நடக்கின்றது என எனக்குத் தெரியும். அதில் யார் யாருக்கு எவ்வளவு கமிசன் செல்கின்றது என்பதும் எனக்குத் தெரியும். ஆளுங்கட்சிக்கு என்னக் கொடுக்கிறாயோ அது போல் எனக்கும் கமிசனைக் கொடுத்துவிடு." எனும் ரீதியில் சமீபகாலமாக பஞ்சாயத்து ஊழியர் உத்திரக்கனியை மிரட்டி வந்துள்ளார். ஆனால் எதற்கும் உத்திரகனி. செவிமடுக்கவில்லையென்பதால் முகநூல் மற்றும் வாட்ஸ் அப்களில் அவதூறு பரப்பி வந்திருக்கின்றார் அவர்.

 

j

 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று முகநூலில் உத்திரகனியின் செயல்பாடுகளை அவதூறாகப் பதிவிட்டுள்ளார் பெஸ்கி ராஜா. அதற்குப் பதில் கூறும் விதமாக உத்திரக்கனியின் மூத்த மகனும், பட்டதாரி வாலிபாரான ஜெயராமன் காரசாரமாக பதிவிட, பிரச்சனை பெரிதானது. இவ்வேளையில், நேற்றிரவு எட்டு மணியளவில் தனது கடையில் வேலைப் பார்க்கும் ரகுபதியை சேர்த்துக் கொண்டு உத்திரகனியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுப்பட்டிருக்கின்றார் பெஸ்கி ராஜா. வாக்குவாதம் கைகலப்பாக மாற அடித்தேக் கொல்லப்பட்டிருக்கின்றார் ஜெயராமன். தடுக்க வந்த உத்திரகனிக்கும் கை உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். கமிசன் தராததால் பெண் ஊழியர் மகன் கொல்லப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.