Skip to main content

காதல் திருமணம்; மகளையும் மருமகனை கொன்ற கொடூர தந்தை! 

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

Tuticorin daughter passed away police arrested her father

 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியில் காதல் திருணம் செய்த தம்பதியரை 26வது நாளில் மகளையும் மருமகனையும் வெட்டிக் கொன்றிருக்கிறார் ஒரு கொடூரத் தந்தை. உறைந்து போய்க் கிடக்கிறது அந்தக் கிராமம்.

 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி மகாலட்சுமி. இவர்களின் ஒரே மகள் ரேஷ்மா (20). இவர் கோவில்பட்டியிலுள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவந்தார். ரேஷ்மா, அவர் கிராமத்தைச் சேர்ந்த தன் உறவினரான மாணிக்கராஜ் என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். மாணிக்கராஜ், கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்திருக்கிறார். இவர்களின் காதலையறிந்த ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். முத்துக்குட்டிக்கு, மாணிக்கராஜின் குடும்பத்தாருடன் ஏற்கனவே பகைமை இருந்திருக்கிறது. மேலும் தன் மகளுக்கு வேறு இடத்தில் வரன் தேடியிருக்கிறார் முத்துக்குட்டி.

 

Tuticorin daughter passed away police arrested her father

 

இதனிடையே கடந்த ஜூன் 26 அன்று ரேஷ்மாவுக்குப் பூப்புனித நீராட்டு நடந்திருக்கிறது. அதற்கு மறு நாள் ரேஷ்மாவும், மாணிக்கராஜும் தலைமறைவானார்கள். ஜூன் 29 அன்று திருமணம் செய்து கொண்டு மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வசித்திருக்கின்றனர். அதே சமயம் தன் மகளைக் காணவில்லை என முத்துக்குடி எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். இந்த நிலையில், காதல் தம்பதியர் ஊர் திரும்ப எண்ணிய நிலையில், நிலைமை சரியில்லை. இப்போதைக்கு திரும்ப வேண்டாம் என்று உறவினர்கள் அவர்களை எச்சரித்துள்ளனர்.

 

ஆனால், அதையும் மீறி காதல் தம்பதியர் கடந்த வாரம் ஊர் திரும்பியிருக்கிறார்கள். தன் தாயார் பேச்சியம்மாளுடன் மாணிக்கராஜ் தங்கியிருக்கிறார். இந்த தகவல் ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டிக்குப் போயிருக்கிறது. பேச்சியம்மாள் 100 நாள் திட்ட வேலைக்குச் சென்று வருகிறவர். 

 

இந்நிலையில், வழக்கம் போல் நேற்று காலை முடிந்து மாலை 3.30 மணியளவில் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது, மகனும் மருமகளும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியில் அவர் கதறி அழுதுள்ளார். இவரின் சத்தம் கேட்டு கிராமத்தவர்கள் அங்கு திரண்டனர்.

 

Tuticorin daughter passed away police arrested her father

 

தகவலறிந்து சம்பவ இடம் வந்த எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகம்மது மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பெண்ணின் தந்தையான முத்துக்குட்டி அன்றைய தினம் மாணிக்கராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, கட்டிலில் படுத்திருந்த மாணிக்கராஜை ஆத்திரத்துடன் வெட்ட முயன்றுள்ளார். அந்தச் சத்தம் கேட்ட மகள் ரேஷ்மா தந்தையைத் தடுத்திருக்கிறார். தடுக்க முயன்ற மகளை முதலில் சரமாரியாக வெட்டியவர், பிறகு மாணிக்கராஜை வெட்டியிருக்கிறார். சம்பவ இடத்திலேயே காதல் தம்பதி இருவரின் உயிரும் பிரிந்திருக்கிறது. தம்பதியரைப் பெண்ணின் தந்தை முத்துக்குட்டி கொன்று விட்டுத் தப்பியோடி இருக்கிறார். மேலும், கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளைப் போலீசார் முத்துக்குட்டியின் வீட்டில் கைப்பற்றினர். மாணிக்கராஜ், ரேஷ்மா இருவரது உடல்களும் உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த எட்டயபுரம் போலீசார் தப்பியோடிய முத்துக்குட்டியை அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்