Skip to main content

நகராட்சி  அலுவலகத்தில் டிக் டாக் - நடவடிக்கை பாய்ச்சல்

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

 

          புல எண் விபரம், சொத்து வரி உரிமம் கேட்டும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் பதிவின் பொருட்டு ஆவணங்களை மக்களுக்குத் தரவேண்டிய கடமை நகராட்சி அதிகாரிகளின் வரம்பில் வருகிறது. ஆனால் அவைகளைப் பெறுவதற்காக சாதாரண ஜனங்கள் நடையாய் அலைய வேண்டிய நிர்ப்பந்தம். ஒரு அதிகாரி இருந்தால் மற்றொரு அதிகாரி இருக்க மாட்டார். அப்படியே அதிகாரியைச் சந்தித்தாலும், சட்ட திட்டங்கள், பைலாக்களைச் சொல்லுவதுண்டு. ஆனால் இந்த சட்ட அளவு கோல்கள் சாதாரண சிட்டிசனுக்கு மட்டுமே. அதிகாரிகளுக்கெல்லாம் கிடையாது என்பதை வெளிப்படையாக உணர்த்தியிருக்கிறது ஒன்று.

 

t

 

தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினம் நகராட்சியின் பொறுப்பு கமிசனர் பணியிலிருப்பவர் அதன் பொறியாளர் ஒருவர். அங்குள்ள நகராட்சியில் பெண் ஊழியர்கள் உள்ளிட்ட 30 பேர்களுக்கும் மேல் பணியில் உள்ளனர்.

 

t

 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்குள்ள ஊழியர் ஒருவரின் பிறந்த நாள் தொடர்பான நிகழ்ச்சியை அலுவலகத்தில் வைத்து சில ஊழியர்கள் நடத்தியுள்ளார்களாம். அது தொடர்பான வீடியோ டிக்டாக் செயலி மூலம், முகநூல் வாட்ஸ் அப்களில் வைரலாகி இருக்கிறது. அது குறித்து விசாரித்து அறிக்கை அனுப்ப நகராட்சி ஆணையருக்கு மாவட்டக் கலெக்டர் சந்திப் நந்தூரி உத்தரவிட்டிருக்கிறார். விசாரணை நடத்திய அதன் பொறுப்பு ஆணையர் பொறியாளர் அறிக்கையை கலெக்டரிடம் தாக்கல் செய்திருக்கிறார்.

 

t

 

மேலும் டிக்டாக் விவகாரத்தில் சிக்கிய பெண்கள் உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் ஏழுபேரையும் நெல்லை நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் தனது அலுவலகத்திற்கு வர வழைத்து நேரடி விசாரணை நடத்தியிருக்கிறார். இவர்கள் மீது நடவடிக்கை பாயலாம் என்று நகராட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

t

இதனிடையே பொறுப்பு பொறியாளர் சரேஷை நெல்லை மாவட்டம் புளியங்குடிக்கும், அங்கிருந்த பொறியாளர் புஸ்பலதா காயல்பட்டினத்திற்கு புதிய பொறுப்பாளராக மாற்றம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.