Skip to main content

சபலிஸ்ட் இன்ஸ்பெக்டரால் சந்தி சிரிக்கும் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை..!

Published on 24/12/2018 | Edited on 24/12/2018

 

g

 

  " ஏய்..! நீ ரொம்ப அழாக இருக்கே.! என்னை கிறங்கடிச்சுட்டே.! ஐஸ்கிரீமை உருக வைச்சு உறிஞ்சு சாப்பிடுவதைப் போல உன்னை சாப்பிடனும்.! எப்ப உன்னைத் தருவே..? வா.! ஜாலியாக ஐஸ்கிரீம் சாப்பிடலாம்." என இரட்டை அர்த்தத்தில் பேசி  அழைத்ததும், " எனக்கும் அவளுக்கும் தொடர்பு இருக்கு.. நீ.! உம் பொண்டாட்டியை விட்டுட்டுப் போயிடனும்." என புருஷனை மிரட்டியதும் இரு வேறு புகார்களாக தட்டார்மட இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது பாய கிடுகிடுத்துள்ளது தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை.

 
 கடந்த சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்த கான்ஸ்டபிள் மனைவி அட்லின் ரேபாவோ, " மளிகைக் கடைக்கு சென்ற என்னை வழிமறித்து " கலரா அழகா இருக்க.! உன்னை வைச்சி அவனுக்கு வாழத்தெரியலை..! உன்னை பார்த்த நாள் முதல் என்னைக் கிறங்கடிச்சுட்டே இருக்கே.! ஐஸ்கிரீம் பார்த்திருப்பிலே.! ஐஸ்கிரீமை உருக உருக வைச்சு உறிஞ்சி சாப்பிடுவதை போல உன்னை சாப்பிடனும். என் போன் நம்பரை வாங்கிக்கோ.! பேசு. சாப்பிடுவோம்." என பேசிக்கொண்டே போனார் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன். பொறுக்காத நானும் எஸ்.பி.ஆபிஸில் புகார் செய்துள்ளேன்." என்றார் அப்பொழுது.!

 

    அதன் பின் அந்த புகார் கிடப்பில் இருந்த நிலையில் தற்பொழுது, " என்னுடைய மனைவி தனலெட்சுமிக்கும் இன்ஸ்பெக்டர் கஜேந்திரனுக்கும் கள்ளத் தொடர்பு உள்ளது. கணையம் பாதிக்கப்பட்ட நான் இது குறித்து அவளிடம் கேள்விக் கேட்டேன். பதிலில்லை. அவளும், இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் பேசியதையும் போனில் ரெக்கார்டு செய்து வைத்திருந்தேன். இது தெரிந்த இன்ஸ்பெக்டர் என்னுடைய செல்போனை வாங்கி அதனை அழித்து விட்டு, மிரட்டி அனுப்பினார். ஆனால் இது நடக்கும் முன்பே எனக்குத் தெரிந்ததால் என்னுடைய சித்தப்பா, சித்தியிடம் கொடுத்து வைத்திருந்தேன். அதனைத் தெரிந்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் சித்தப்பா நயினார் மீதும் சித்தி ஜெயக்கொடி மீதும் பொய்யாக வழக்குப் பதிவு செய்து மிரட்டுகின்றனர். அவரின் பிடியிலிருந்து என்னுடைய மனைவியை மீட்டு எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்." என சாத்தான்குளம் துணைக்காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அனுப்பியுள்ளார் வள்ளுவர் தெரு, சாத்தான்குளம் தாமரை மொழியை சேர்ந்த ஜெகதீசன்.

 

  இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் பெண்கள் விவகாரத்தில் சபலிஸ்டு என்கிறது முந்தைய ரெக்கார்டுகள்.! டி.எஸ்.பி.யாக வேண்டியவர் இப்பொழுது வரை இன்ஸ்பெக்டராக இருக்கின்றார். பணியினை துஷ்பிரயோகம் செய்ததாக காவல்துறையில் அவர் மீது போடப்பட்ட 3பி மெமோக்கள் மட்டும் மொத்தம் 6. இதற்கு முன் ராமநாதபுரம் மண்டபம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பொழுது பிரபல கஞ்சா வியாபாரியான ஜெகதீஷ் மற்றும் கண்மணி தம்பதியினர் மீது நெருக்கம் இவருக்கு. மாத மாமூலுக்குப் பதில் தினசரி மாமூலாக கண்மணியிடம் உடலைப் பெற்றுக்கொள்வதுண்டு. அப்படி ஒரு நாள் மண்டபம் போஸ்ட் ஆபிஸ் தெருவிலுள்ள கண்மணி வீட்டிற்குள் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் செல்ல, இது தான் தருணம் என்று காத்திருந்த உள்ளூர் மக்கள் வீட்டை வெளியில் பூட்டிவிட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த விவகாரத்தால் அப்போதைய எஸ்.பி.மணிவண்ணன் இவரை சஸ்பெண்ட் செய்தது தனிக்கதை. இவரின் சபல புத்தியால் பாதிக்கப்படுவது என்னமோ தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை தான்.!!

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்