ADVERTISEMENT

மீண்டும் துப்பாக்கிச் சூடு: தூத்துக்குடியில் பதற்றம்

12:41 PM May 23, 2018 | rajavel


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி ஆனார்கள். மேலும் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே கூடியுள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்த அவர்களின் உறவினர்கள் அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தனர். மருத்துவமனையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களை கலைக்க போலீசார் இரண்டு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். மருத்துவமனைக்கு முன்பு கூடியிருந்த மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT