Skip to main content

மஞ்சள் ஏலம் தொடங்கியது... விவசாயிகளுக்கு விளைந்துள்ள நம்பிக்கை!

Published on 22/04/2020 | Edited on 22/04/2020


தென்னிந்தியாவிலேயே மஞ்சள் விவாசயத்திற்கும் விற்பனைக்கும் தலைநகராக இருப்பது ஈரோடு தான். இங்கிருந்து தமிழகம் முழுக்க மட்டுமில்லாது இந்தியாவின் பல மாநிலங்களுக்கு ஈரோடு மஞ்சள் விற்பனைக்குச் செல்கிறது. அப்படிப்பட்ட மஞ்சள் கரோனா தொற்றின் காரணமாகச் சென்ற ஒரு மாத காலத்திற்குப் பின் ஈரோடு மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மஞ்சள் ஏலம் இன்று துவங்கியது. 

 

Turmeric

 


இதை மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் என நான்கு இடங்களில் ஏலம் நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் மாதம்  22-ம் தேதி முதல் ஊராடங்கு உத்தரவின் காரணமாக மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
 

இந்த நிலையில் பெருந்துறை ஒழங்கு முறை விற்பனைக்கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகிய இரண்டு இடங்களில் ஒரு மாதத்திற்குப் பிறகு இன்று முதல் மஞ்சள் ஏலம் துவங்கியது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஏலத்தைத் துவங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசும் போது, "இன்று முதல் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மஞ்சள் ஏலம் துவங்கியுள்ளது. இதில் கலந்துகொள்ளும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி செயல்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பெருந்துறை மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 24 டன் மஞ்சள் வரத்து விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மதிப்பு 18 லட்சம் ரூபாய் அதேபோன்று ஈரோடு மஞ்சள் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு 30 டன் மஞ்சள் வரத்து உள்ளது. இதில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இன்று முதல் தொடர்ந்து மஞ்சள் ஏலம் நடைபெறும் எனத் தெரிவித்தார். 

 

http://onelink.to/nknapp

 

தனியார் மஞ்சள் கிடங்கு உரிமையாளர் சங்கச் செயலாளர் சத்தியமூர்த்தி கூறுகையில், கரோனா தொற்றின் காரணமாக ஒரு மாதத்திற்குப் பிறகு துவங்கிய இந்த ஏலத்தில் 18 மஞ்சளை மாதிரிகளுக்கு வைத்திருந்தனர். இன்று முதல் ஊராடங்கு காலம் முடியும் வரை வெளி மாவட்ட, வெளி மாநில மஞ்சள் வியாபாரிகள் கலந்து கொள்ள அனுமதியில்லை என்றும் தற்பொழுது கிருமி நாசினி தேவை அதிகரித்துள்ளதால் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும். என்றார்.

 

ஒவ்வொரு நாளும் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் மஞ்சள் வியாபாரம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100 கோடி வரை முடக்கம் ஏற்பட்டுள்ளது. இனி மஞ்சள் வியாபாரம் மெல்ல மெல்ல விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் உயிர் சுவாசத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.