Skip to main content

தினகரனை அச்சுருத்த திவாகரன் நடத்தும் ஜெ. பிறந்த நாள் பொதுக்கூட்டம்

Published on 15/02/2019 | Edited on 15/02/2019
d

 

 அதிமுகவின் அதிகார மையம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது மன்னார்குடி. ஜெ. வின் மறைவுக்கு பிறகு அதிகார மையத்தை ஒதுக்கினார்கள் அதிமுகவினர். தங்களுக்குள் உடைத்து கொண்டார்கள் மன்னார்குடி வகையறாக்கள்.
    ஜெ. மறைந்த பிறகும் மன்னார்குடியின் வழிகாட்டுதலில் ஆட்சியையும் கட்சியையும்  சசிகலா தான் வழிநடத்த வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறிய மக்களவை துணை சபா தம்பிதுரை போன்றவர்களின் பேச்சை கேட்கவேண்டாம் என்று திவாகரன் சொன்னதை கேட்காமல் தினகரன், டாக்டர் வெங்கடேசன் பேச்சுகளை கேட்ட சசிகலா கட்சி பதவியை ஏற்ற நிலையில் பிரச்சனை உருவான நிலையில் பதவிக்கு அழைத்து வந்தவர்கள் ஒதுங்கியதுடன் விலக்கி வைக்கவும் குரல் உயர்த்தினார்கள். அதன் பிறகும் அதிமுக வுடன் இணைந்து செயல்பட திவாகரன் எடுத்த முயற்சிகளுக்கு தினகரன் தரப்பினர் முட்டுக்கட்டை போட்டதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித் தனி கட்சிகள் உருவாக்கினார்கள்.


 இந்த நிலையில் திவாகரனால் உருவாக்கி வளர்க்கப்பட்டவர்களை தினகரன் இழுத்துக் கொண்டார். இதில் தினகரன் அணிக்கு சிறையில் இருக்கும் சசிகலாவின் ஆதரவு இருப்பதால் திவாகரனும் தனது பங்குக்கு அண்ணா திராவிடர் கழகத்தை உருவாக்கினார். 

 

  இதன் பிறகு தனி நபர் தாக்குதல் வரை கருத்து மோதல்கள் உச்சம் பெற்றது. இந்த நிலையில் தான் ஜெ. பிறந்த நாளை மன்னார்குடியில் கொண்டாடுவதுடன் ஒரு லட்சம் பேரை கூட்டி பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் திவாகரன். 


பிப்ரவரி 24 ந் தேதி மாலை மன்னை பந்தலடியில் நடக்கும் ஜெ. பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களை கொண்டு வருவதுடன் அமமுகவில் அதிருப்தியில் உள்ள மாஜி சமஉ க்களையும் அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த பொதுக்கூட்டம் அமமுக வுக்கு பதிலடி கொடுப்பதுடன் வரும் பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சிக்கான கூட்டணியை பற்றி பேச வைக்கும் முயற்சியாகவும் மாற்றும் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது.


    எப்போதும் போல ஓபிஎஸ் உடன் தொடர்பில் உள்ள திவாகரன் பொதுக்கூட்டத்தின் மூலம் அதிமுக பாஜக கூட்டணியுடன் அண்ணா திராவிடர் கழகமும் கூட்டணி அமைக்கும் பணியும் தீவிரமடைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சசிகலா தலைமையுடன் திவாகரனின் அ.தி.க இணையும் விழா... தஞ்சையில் இரட்டை இலை கொடி தோரணங்கள் அணிவகுப்பு!

Published on 12/07/2022 | Edited on 12/07/2022

 

Divakaran's A.D.K. joining ceremony with Sasikala leadership.. Double leaf flag postures parade in Tanjore!

 

ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவில் உடைப்பு ஏற்பட்டு சசிகலா, தினகரன், திவாகரன், பாஸ்கரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பெயர்களில் கட்சி தொடங்க பரபரப்பு ஏற்பட்டிருந்தது. சிறையிலிருந்து வந்த சசிகலாவுக்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அதிமுகவில் அவருக்கு இடமில்லை என்று ஒதுக்கப்பட்டார். ஆனால் தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 

Divakaran's A.D.K. joining ceremony with Sasikala leadership.. Double leaf flag postures parade in Tanjore!

 

ADMK

 

இதற்கிடையில் ஓபிஎஸ் - இபிஎஸ் உடைத்துக் கொண்டு கட்சியை ஒருவரும் கட்சி அலுவலகத்தை ஒருவருமாக கைப்பற்றி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் இனி சின்னத்தையும் முடக்குவார்கள் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில்தான் சசிகலாவின் தம்பி திவாகரன் தான் தொடங்கிய அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா தலைமையில் அதிமுக வில் இணைப்பதாக அறிவித்தார். இன்று இணைப்பு விழா ஏற்பாடுகள் தஞ்சை தமிழரசி மண்டபத்தில் நடந்தது. 

 

Next Story

சசியுடன் கைகோர்க்கும் திவாகரன்... தஞ்சையில் இணைப்பு விழா!

Published on 10/07/2022 | Edited on 10/07/2022

 

Divakaran joins hands with Sasi.. Connection ceremony in Thanjavur!

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரங்கள் சூடுபிடித்து, மீண்டும் பொதுக்குழு கூடுவதற்கான வழக்கில் நாளை காலை 9 மணிக்கு நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. மறுபுறம் அதிமுக பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவை மீட்கப் போவதாக அரசியல் பயணத்தைத் தொடங்கி இருக்கும் சசிகலாவுடன் அவரது சகோதரர் திவாகரன் இணை இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

ஏற்கனவே அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை சசிகலாவின் சகோதரரான திவாகரன் நடத்தி வந்த நிலையில் தஞ்சையில் வரும் 12ஆம் தேதி நடைபெறும் இணைப்பு விழாவில் சசிகலா தலைமையில் தனது கட்சியை இணைக்க இருக்கிறார் திவாகரன். சசிகலாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திவாகரன் கடந்த 2018 ஆம் ஆண்டு 'அண்ணா திராவிடர் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.