Skip to main content

டிடிவி கட்சியை அழித்து விட்டார்! தங்கதமிழ்செல்வன்  பகீர் பேட்டி!!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் டிடிவி தீவிர ஆதரவாளராகவும் இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திடீரென  திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார். அதன்பின் தங்க தமிழ்ச்செல்வன் தனது பலத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக தேனியில்  ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை கூட்டி ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களையும் திமுகவில் இணைந்தார். அதன்பின் தங்க தமிழ்ச்செல்வனுக்கு மாவட்ட அளவில் பதவி கிடைக்கும் என்ற பேச்சு உ.பி.கள் மத்தியில் பரவலாக இருந்து வந்தது. இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின்  தங்க தமிழ்ச்செல்வனுக்கு மாவட்ட பொருப்பை விட மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை
கொடுத்தார்.
 

thanga tamil selvan

 

 

இந்த நிலையில் தான் தேனி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கட்சிக்காரர்கள் பலர் ஆளும் கட்சியான அதிமுகவிலும் எதிர்க் கட்சியான திமுகவிலும் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் டிடிவி யின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி திடீரென டிடிவி-க்கு எதிராக  கூட்டங்களை போட்டுக்கொண்டு வருகிறவர் கூடிய விரைவில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்திக்க இருக்கிறார் என்ற பேச்சு பரவலாக எதிரொலித்து வருகிறது.

இதுசம்பந்தமாக  திமுக  கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது..... டிடிவி பெரிய ஒரு அரசியல் தலைவர் போல் இமேஜை வளர்த்துக்கொண்டு செயல்பட்டாரே தவிர, கட்சியை வளர்க்க ஆர்வம் காட்டவில்லை. தன்னுடன் இருக்கும் இரண்டு ஜால்ராக்களின்  பேச்சைக் கேட்டுக் கொண்டு செயல்பட்டு வருவதின் மூலமே கட்சியும்  மாநில அளவில் அழிந்து வருகிறது. அதுபோல் பொறுப்புகளில் இருக்கும் கட்சிக்காரர்களை மதிப்ப தில்லை அதனால்தான்  தற்பொழுது புகழேந்தி கூட  டிடிவி-க்கு எதிராக  பேசிக்கொண்டு மாற்றுக் கட்சிக்கு போவதாக  எனக்கும் தகவல் வந்தது.  அதுபோலவே  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருக்க கூடிய  பொறுப்பாளர்கள் தொண்டர்கள் டிடிவி-க்கு எதிராக மாற்று கட்சிகளுக்கு தான்  போய் வருகிறார்கள்  அதில்  பெரும்பாலானோர்  திமுக பக்கம்   தான் வருகிறார்கள் இந்த நிலை தொடருமானால் அந்தம்மா ஜெயிலிலிருந்து வருவதிற்குல்லையே தமிழகத்தின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அறவே இருக்காது. வெறும் பெயரை மட்டும் தான் அந்த அம்மாவிடம் டிடிவி சொல்ல முடியும் அந்த அளவுக்கு தன்னுடைய ஆணவத்தின் மூலமே கட்சியை அளித்து விட்டார். அவரை நம்பி வந்தவர்களையும் ஏமாற்றி விட்டார் என்பது தான் உண்மை!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.