Skip to main content

போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற அமமுக பொதுக்குழு உறுப்பினர் மர்ம மரணம்!

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
ttv


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள பழவேரிக்காடு முன்னாள் ஊ.ம தலைவர் குமாரசெல்வம், அமமுகவின் மாநில பொதுக்குழு உறுப்பினர். இவரது வீட்டுக்கு கடந்த 17ந் தேதி காலை சென்ற மதுக்கூர் போலீசார் ஒரு பிசிஆர் வழக்கு சம்மந்தமாக விசாரணைக்கு வர வேண்டும் என அழைத்துள்ளனர்.

சற்று தாமதமாக வருவதாக குமாரசெல்வம் சொன்னதை கேட்காமல் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மாலை மதுக்கூர் காவல் நிலையம் சென்று கேட்ட போது அவரை எங்கே வைத்துள்ளனர் என்பது பற்றி தகவல் சொல்லவில்லை. அதனால் அவரை பட்டுக்கோட்டை மற்றும் பல காவல்நிலையத்திலும் தேடியுள்ளனர்.

 

 

இந்தநிலையில் இன்று வெள்ளக்கிழமை இரவு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குமாரசெல்வம் இறந்துள்ளார் என்ற தகவல் கொடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 17ந் தேதி கைது செய்யப்பட்ட குமாரசெல்வத்தை காவல் நிலையத்தில் தாக்கிய போது அவருக்கு உடல்நக்குறைவு ஏற்பட்டதால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த போலீசார் அதன் பிறகு உறவினர்களுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்துவிட்டனர்.

இந்த நிலையில் தான் குமாரசெல்வம் இறந்துள்ள தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி அமமுகவினரும் அவரது உறவினர்களும்.. காவல் நிலையத்தில் தாக்கியதில் பாதிக்கப்பட்டவரை போலீசாரே மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இறந்த பிறகு தகவல் சொல்கிறார்கள். குமாரசெல்வத்தை அடித்துக் கொன்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவர் உடலை வாங்கமாட்டோம் என்கின்றனர். இதனால் பட்டுக்கோட்டை மதுக்கூர் பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர் குமாரசெல்வம் இறுதி நிகழ்ச்சியில் தினகரன் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டி.டி.வி. தினகரன்..! (படங்கள்)

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமமுக கட்சித் தலைவர் டி.டி.வி தினகரன், அவரது வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வேளச்சேரி தொகுதியின் அமமுக  வேட்பாளர் சந்திர போஸை ஆதரித்து டி.டி.வி. தினகரன் வேளச்சேரி காந்தி சாலையில் பிரச்சாரம் செய்தார். 

 

 

Next Story

சசிகலா தமிழகம் வருகை... அமமுகவினர் உற்சாக வரவேற்பு!! (படங்கள்)

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவிலிருந்து தமிழகம் வரும் சசிகலாவிற்கு வழிநெடுகிலும் 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடகா - தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் சசிகலாவை வரவேற்றனர்.

 

அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை அழைத்து வரப்படுகிறார் சசிகலா. சென்னை எல்லையான செம்பரம்பாக்கம் தொடங்கி நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர், கிண்டி கத்திப்பாரா என தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.