ADVERTISEMENT

டிடிவி ஆதரவாளர்கள் வேகத்தை பார்த்து திகைத்த பொதுமக்கள்..!

04:03 PM Mar 15, 2018 | Anonymous (not verified)


ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., டிடிவி தினகரன் இன்று மதுரை மேலூரில் நடந்த விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று தனது அமைப்பின் பெயர், கொடியை அறிவித்தார். விழா திடலில் அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார். கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியின் நடுவில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியை அறிமுகப்படுத்தினார்.

முன்னதாக, மதுரையில் இருந்து பொதுக்கூட்டத்துக்கு பங்கேற்க வந்த டிடிவி தினகரனுக்கு அவரது ஆதரவாளர்கள் வழிநெடுக கொடி தோரணங்கள் அமைத்து உற்சாக வரவற்பு அளித்தனர். இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

காலையில் அமைப்பு பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்துவிட்டு அவர் திரும்பி செல்வதற்குள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பின் கொடிகள் டிடிவி தினகரன் ஆதரவாளர்களின் கார்களில் பறந்தது. இதனை பார்த்த பொதுமக்கள், இவ்வளவு வேகமாக இருப்பாங்களான்னு திகைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT