Skip to main content

செந்தில்பாலாஜியை நெருக்கும் டிடிவி தினகரன்! கை கொடுக்கும் மு.க. ஸ்டாலின்!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019


தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பிரச்சாரம் செய்யாத நேரத்தில் தன்னுடைய பிரச்சாரத்தை 6 மாதத்திற்கு முன்னதாகவே பிரச்சாரத்தை ஆரம்பித்தவர் டிடிவி தினகரன். மற்ற கட்சிகள் ஆரம்பிக்கும் போது 60 சதவீத தொகுதி பிரச்சாரத்தை முடித்திருந்தார்.

 



தனித்துச் செயல்படத் தொடங்கிய தினகரன் தொடர்ச்சியாக மாநாடுகள் நடத்துவதற்கு அதிகமாகச் செலவு செய்தவர் செந்தில்பாலாஜி. அதுவரை தினகரன் எந்தச் செலவு செய்யாமல் கூட இருப்பவர்களையே செலவு செய்ய வைத்தார். ஆனால் செந்தில்பாலாஜி தொடர்ச்சியாக செலவு செய்தும், இங்கே இருந்து எந்த முன்னேற்றமும் இருக்காது என்று முடிவு பண்ணி தி.முக.வில் இணைந்து கடந்த 15 வருடங்களாகச் சோர்ந்து போயிருந்த திமுகவிற்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்து மாவட்ட பொறுப்பாளராக ஆகி தற்போது அரவக்குறிச்சி தேர்தலில் வேட்பாளராக இருக்கிறார்.

 

ttv dinakaran verses senthilpalaji... Election situation



செந்தில்பாலாஜி திமுகவிற்கு அணி மாறியது தினகரன் தரப்பு ஆதரவாளர்கள் இடையே பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அதுவரை தினகரன் மீது நம்பிக்கையாக இருந்த பல பேர் தேர்தலுக்குப் பணம் எங்களால் செலவு செய்ய முடியாது என்று மறுப்பு காட்ட ஆரம்பித்தனர்.

 



இதன் பிறகு தான் வேறு வழியில்லாமல் டிடிவி.தினகரன் தனிப்பட்ட முறையில் கட்சி சார்பாக எம்.பி. தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்குக் கட்சி நிதி ஒன்று குறிப்பிட்ட பணத்தைத் தாராளமாக இறைத்தார்.

 



தற்போது அரவக்குறிச்சி தொகுதியில் வேறு எந்தத் தொகுதிக்கும் இல்லாத அளவிற்குத் திமுக, அதிமுக இணையாவும் அதற்கு ஒரு படி மேலேயேயும் செலவு பண்ணியிருக்கிறார்கள். அரவக்குறிச்சிக்குத் தொடர்ச்சியாக 3 முறை இந்தத் தொகுதிக்குள் வலம் வந்து 100 இடங்களுக்கு மேல் பிரச்சாரம் செய்து தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற செந்திபாலாஜி ஜெயிக்கக் கூடாது என்று நெருக்கடி கொடுக்கிறார்.

 

ttv dinakaran verses senthilpalaji... Election situation



அமமுகச் சார்பில் வெளியூர்களில் இருந்து முன்னாள் அமைச்சர்கள். பழனியப்பன், அன்பழன், ரெங்கராஜன், மாவட்ட செயலாளர்கள் மனோகரன், சீனிவாசன், தங்கவேல், திண்டுக்கல் நல்லசாமி, தர்மபுரி டி.கே.ராஜேந்திரன், என் பெரிய பட்டாளத்தையே இறக்கி தொகுதியை கதிகலங்க வைத்துள்ளார்.

 

 



திருச்சியிலிருந்து வந்திருக்கும் மா.செ மனோகரன், சீனியவாசன் குரூப் கோவிலூர் பகுதியில் தனிப்பட்ட முறையில் சில்வர் தட்டு, குடங்கள் ஆகியவற்றை இலவசமாகக் கொடுத்து மக்களை வசியப்படுத்தும் வேலையிலும் இறங்கியிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக பள்ளப்பட்டி பகுதியில் முஸ்லீம்களிடம் 100 சதவீதம் பணம் கொடுத்துள்ளார்கள். வேட்பாளரும் முஸ்லீம் என்பதால் இங்கே உள்ள 60,000 வாக்குகளை குறிவைத்து காய் நகர்த்தி உள்ளார்கள். இப்படி செய்வதன் மூலம் திமுகவிற்கு செல்ல வேண்டிய வாக்குகள், பெரும் அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் என்று நினைக்கிறார். 

 

ttv dinakaran verses senthilpalaji... Election situation



செந்தில்பாலாஜிக்கு நெருக்கடியை தினகரன் கொடுக்கிறார் என்பதை அறிந்த அதைச் சமாளிக்கும் விதமாகத் திமுகத் தலைவர் ஸ்டாலின் முதல்முறையாக வந்த போது பள்ளப்பட்டியில் சுற்றி சுற்றி நகர்ந்து நடந்து பிரச்சாரம் செய்து அவர்கள் குறைகளை கேட்டறிந்தார் அதற்கு பெரிய ரெஸ்பான்ஸ் மக்களிடம் கிடைத்தது. அங்கிருந்து அதிமுக முக்கிய பொருப்பாளர்கள் பலர் ஸ்டாலின் வருகைக்கு பிறகு திமுக பக்கம் திரும்பினார்கள். தற்போது தினகரன் 3 முறை தொகுதி பக்கம் வந்து சென்றதால் இரண்டுடாவது முறையாக அரவக்குறிச்சிக்கு தேர்தல் பிரச்சாரம் நிறைவு நாளில் வருகிறார். இதன் மூலம் செந்தில் பாலாஜிக்கு கடைசி நேர நெருக்கடியை சமாளிக்க வாய்ப்பு இருக்கும் என்கிறார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.