/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thirumavalavan ttv1.jpg)
அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணப்பொருட்களை வழங்கினார். அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் மக்களை சந்திக்க அங்கே வந்திருந்தார். இருவரும் சந்தித்து பேசினர்.
புயலின் கோர தாண்டவத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இருவரும் சிறிது நேரம் பேசினர் பேசிக்கொண்டனர். இவர்களது சந்திப்பு எதார்த்தமாக நடந்தாலும், அரசியல் குறித்தும் பேசியதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
Follow Us