Skip to main content

கொங்கு மண்டலத்தை அழித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி...! - ஈரோட்டில் டி.டி.வி.தினகரன் தாக்கு

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

ஈரோடு தொகுதி அ.ம.மு.க.வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து டி.டி.வி.தினகரன் நேற்று இரவு ஈரோடு தொகுதியில் பிரச்சாரம் செய்தார் அப்போது தினகரன் பேசியதாவது,

 

 

"மத்தியில் மோடி, மாநிலத்தில் எடப்பாடி இந்த இருவர் ஆட்சியால் கடந்த இரு ஆண்டுகளாக  மக்களுக்கு துன்பங்கள் கூடிவிட்டது.. மத்திய, மாநில கொடுங்கோல் ஆட்சிகளை முடிவுக்குக்  கொண்டு வர நல்லதொரு வாய்ப்புதான், மக்களவைத் தேர்தலும், 18 தொகுதி இடைத்தேர்தலும். 18 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 8 தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றால், இந்த எடப்பாடி பழனிசாமி  அரசு கவிழ்ந்து விடும்.

 

ttv dinakaran election campaign  in erode

 

நான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவன், விவசாயி, என செல்லுகிற இடமெல்லாம் சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்கவில்லை.. போராடிய விவசாயிகள் மீது அடக்குமுறையைக் கையாளுகின்றனர். மத்திய பாஜக அரசின் செல்வாக்கினால் நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைப் கொண்டு வந்து காவிரிப்படுகை விவசாயிகளை அழிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

 

மேற்கு மண்டலத்தில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதாகக் கூறி நிலங்களைப் பாழ்படுத்தி வருகின்றனர். இது மத்திய அரசின் திட்டம் என்று சொல்கிறார்கள். மத்திய அரசின் கைக்கூலியாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. 

 

அதிமுகவிற்கு எப்போதும் ஆதரவு தரும் பகுதியாக மேற்கு மண்டலப்பகுதி விளங்கியதால், ஜெயலலிதா அதிக அமைச்சர் பதவிகளை இங்கு வழங்கினார். ஏன்? கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலா முதல்வர் பதவியையே கொடுத்தார். ஆனால், ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், சசிகலாவிற்கும், தமிழக மக்களுக்கும் இந்த ஆட்சியாளர்கள் துரோகம் செய்து செய்து விட்டனர்.

 

 

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்பும் அவர் ஒரு குற்றவாளி என்றும், அவர் உயிரோடு இருந்தால் சிறைக்குச் சென்று இருப்பார் என்று பா.ம.க. ராமதாஸ் கூறினார். அது மட்டுமா? , ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் வைக்கக் கூடாது என்று தடுத்ததோடு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று  நீதிமன்றம் சென்றவர்களுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார். இதன் மூலம் ஜெயலலிதாவிற்கு அவர் துரோகம் செய்துள்ளார். 

 

ttv dinakaran election campaign  in erode

 

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மோடியா, லேடியா எனக்கேட்டு ஜெயலலிதா வாக்கு சேகரித்தார். ஆனால், இன்று மோடியின் காலைப்பிடித்துக் கொண்டு தமிழக ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். மத்தியில் உள்ளவர்களுக்கு இவர்கள் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது இங்கு இருந்த ஜமீந்தார்கள் எல்லாம் எடுபிடிகளாக இருந்ததுபோல, இப்போது அதுபோல தமிழக ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். இந்த துரோகிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

 

 

கொங்கு மண்டலத்திற்கு முதல்வர் பதவி கொடுத்து நாங்கள் பெருமை சேர்த்தோம் ஆனால் அந்த முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டலத்தின் ஜீவாதாரமான  விவசாயம், பின்னலாடை, நெசவுத்தொழில்கள் அழிந்து வருகிறார். " என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.