Skip to main content

8 வழிச்சாலைக்கு எதிராக போராடினால் சமூக விரோதிகளா? டிடிவி தினகரன் ஆவேசம்

Published on 23/06/2018 | Edited on 23/06/2018
ttv


8 வழிச்சாலையினால் விவசாயிகள் பெரும் பாதிப்படைவதால் போராட்டம் நடக்கிறது. அதனால் இவர்கள் என்ன சமூக விரோதிகளா? என அமுமுகவின் துணைபொதுச் செயலாளார் டி.டி.வி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஐனநாயக நாட்டில் போராட்டம் என்பது அறவழியில் நடைபெறுகிறது. மகாத்மா காந்தியே அறவழி போராட்டம் நடத்தியவர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுகாதாரக் கேடு ஏற்படுவதால் போராட்டம் ஏற்பட்டது. 8 வழிச்சாலையினால் விவாசாயிகள் பாதிப்படைகிறார்கள் ஆதலால் போராட்டம் நடக்கிறது. அதனால் இவர்கள் என்ன சமூக விரோதிகளா? காவல் துறையினரை வைத்து அராஜகத்தை நடத்துகிறது இந்த அரசு.

மத்திய அராசாங்கம் தாய் கோழி குஞ்சை காப்பற்றுவது போல மாநில அரசை காப்பாற்றுகிறது. பெண் பக்திரிக்கையாளர்களை தரக் குறைவாக பேசுகிறார்கள். எங்கள் கட்சிக்காரரை தீவிரவாதி போல் கைது செய்கிறார்கள். எஸ்.வி.சேகரை கைது செய்ய பயப்படுகிறது.
 

ttv


8 வழிச்சாலை திட்டம் என்றால் என்ன என்பதை முதலில் நிலத்து சொந்தகாரர்களுக்கு எடுத்துரைக்கு வேண்டும் பின்பு அவர்களை பாதிக்கவில்லையென்றால் செயல்படுத்துங்கள் ஏன் இந்த அவசரம்? போராடுகிற மன்சூர் அலிகான் உட்பட வளர்மதி, பியூஸ் மனுஷ் போன்றவர்களை கைது செய்ததில் என்ன நியாயம் உள்ளது? குட்கா விஷயத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே என் கருத்து. இதை துரிதபடுத்துவதில் தவறு இல்லை.

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையிலும் தேவை. அது போல் இன்னும் ஒரு மாவட்டத்திற்க்கு வந்தாலும் நல்லது தான். எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில் நான் நீதிமன்றத்தை நம்புகிறேன். கமலஹாசன் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனத்தை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. என்னை பற்றி ஆர்.கே.நகரில் தோற்று விடுவேன் என்றார். அது நடந்தா விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டி.டி.வி. தினகரன்..! (படங்கள்)

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமமுக கட்சித் தலைவர் டி.டி.வி தினகரன், அவரது வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வேளச்சேரி தொகுதியின் அமமுக  வேட்பாளர் சந்திர போஸை ஆதரித்து டி.டி.வி. தினகரன் வேளச்சேரி காந்தி சாலையில் பிரச்சாரம் செய்தார். 

 

 

Next Story

சசிகலா தமிழகம் வருகை... அமமுகவினர் உற்சாக வரவேற்பு!! (படங்கள்)

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவிலிருந்து தமிழகம் வரும் சசிகலாவிற்கு வழிநெடுகிலும் 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடகா - தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் சசிகலாவை வரவேற்றனர்.

 

அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை அழைத்து வரப்படுகிறார் சசிகலா. சென்னை எல்லையான செம்பரம்பாக்கம் தொடங்கி நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர், கிண்டி கத்திப்பாரா என தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.