Skip to main content

திருவாரூர் தொகுதிக்கு வேட்பாளரை முதலில் அறிவித்து மாஸ் காட்டும் டி.டி.வி.தினகரன்

Published on 04/01/2019 | Edited on 04/01/2019

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து விறுவிறுப்பு கூடிக்கொண்டே இருக்கிறது.

 

ss

 

அதிமுக, திமுக, அமமுக, என மும்முனைப் போட்டியாக உருவெடுத்திருக்கும் திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தலில், யார் வேட்பாளர்களை முதலில் அறிவிக்கப்போகிறார்கள் என்கிற பேச்சுக்கு இடையில் முதலில் தனது கட்சி வேட்பாளர் பெயரை அறிவித்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். 

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரான எஸ்.காமராஜ்தான்  போட்டியிடுவார் என பரவலாக மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரங்களிலும் பேசப்பட்டு வந்தநிலையில் இன்று அதிரடியாக அவரே வேட்பாளர் என அறிவித்திருப்பது சக அரசியல் கட்சியினரை முனு முனுக்கவைத்திருக்கிறது.

 

தஞ்சாவூர், காவிரி திருமண மண்டபத்தில் அமமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  டி.டி.வி தினகரன் தலைமையில் (இன்று) 4-ம் தேதி நடந்தது.  அந்த கூட்டத்தில் திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மற்றும் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டனர். இறுதியில் திருவாரூர் மாவட்ட செயலாளரான எஸ்.காமராஜே வேட்பாளர் என அறிவித்தார் தினகரன். 

 

யார் இந்த எஸ்.காமராஜ்?

மன்னார்குடியைச் சேர்ந்த எஸ்.காமராஜ் பிரபலமான தரணி கல்வி குழுமத்தையும், தரணி கன்ஸ்டரெக்ஷனையும் நடத்திவருகிறார். 1981-ஆம் ஆண்டு அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்த இவர், திவாகரன், சசிகலா குடும்பத்தினரோடு மிகவும் நெருக்கமானவராக இருந்துவந்தார். மன்னார்குடி அருகே உள்ள நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய சேர்மேனாக ஒருமுறையும், ஒன்றியக்குழு உறுப்பினராக ஒருமுறையும் பதவி வகித்துள்ளார். 2002-ஆம் ஆண்டு ஜெயலலிதா, இவரை மாவட்ட செயலாளராக அறிவித்தார். அதன் பின் 16 மாதங்களில் அவரிடமிருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு சிட்டிங்க் அமைச்சரான ஆர்.காமராஜிடம் வழங்கப்பட்டது. அன்று முதல் சசிகலா குடும்பத்தோடு மிகவும் நெருக்கத்தோடு இருக்கும் இவருக்கு, 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திவாகரன் மற்றும் சசிகலாவின் ஆசியோடு மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரான டி.ஆர்.பி.ராஜாவிடம் 8,200  வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியைத் தழுவினார்.  தான் தோற்றதற்கு சிட்டிங் அமைச்சரான காமராஜின் உள்ளடி என்பதை தெரிந்து கொண்டு வாய்ப்புக்காக  அமைதியாக காத்திருந்தவர். அதிமுக இரண்டாகப் பிரிந்ததும். அமமுகவில் திவாகரனுக்கும், தினகரனுக்கும் ஆதரவாக சென்றார்.

 

அமமுகவில் மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. சிறிது காலத்தில் திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட விரிசலால் தினகரனிடம் செல்வதா, திவாகரனிடம் செல்வதா என்கிற குழப்பத்திற்கு ஆளாகி அமைதியானவர் மீண்டும் தினகரனிடமே ஐக்கியமானார்.

 

இந்த நிலையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக தலைவர் கலைஞர் காலமானதை தொடர்ந்து காலிதொகுதியாக அறிவிக்கப்பட்டு, ஜனவரி 28-ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆனையம அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருக்கிறார். 

 

திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் நன்கு அறிமுகமானவராகவும், அனைத்து அரசியல் கட்சியினரிடமும் சகஜமாக பழகக்கூடியவராக இருப்பதனாலும் இவருக்கு தற்போது மாஸ் கூடியிருக்கிறது என்கிறார்கள் பலரும்.

 

திமுகவின் சார்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் போட்டியிடப்போகிறார் என்கிற பேச்சு பரவலாகவே இருந்த நிலையில், இறுதி நேரத்தில் திமுக மாவட்ட செயலாளர் கலைவாணன் போட்டியிடுவார், என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது திமுக தலைமை. அதேவேளையில் அதிமுக இன்று நான்காம் தேதி வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனைக்கூட்டம் நடத்த இருந்த நிலையில் திடீரென  நாளை 5 ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.