அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று சென்னையில் உள்ள தன் கட்சி அலுவலகத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களுடனும் மற்றும் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இதில் தகுதி நீக்க வழக்கை பற்றியும், நாடாளுமன்ற தேர்தலை பற்றியும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், இன்று பெங்களூர் பரப்பன அஹ்ரகார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

Advertisment

சசிகலாவை சந்தித்த பின், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம் எல் ஏக்கள் குற்றாலத்தில் தங்கியிருக்க டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.