சுனாமி 16வது நினைவு தினம்.. பட்டினப்பாக்கத்தில் மீன்வர்கள் அஞ்சலி... (படங்கள்) 

சுனாமி தாக்கியதின் 16- வது நினைவு தினத்தையொட்டி தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மீன்பிடி இறங்கு தளத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்தூவியும், கடலில் பாலை ஊற்றியும் பொதுமக்கள், மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் இறந்தவர்களுக்கு, மக்கள் கடலில் பால் ஊற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். மேலும் கடற்கரையில் மணல் மேடு ஒன்றை உருவாக்கி அதன் அருகே விளக்கேற்றியும் மீன்வர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் துக்கம் அனுசரிக்கும் விதமாக தங்களது கப்பல்களில் கருப்பு கொடியையும் கட்டிவைத்திருந்தனர்.

Chennai tsunami
இதையும் படியுங்கள்
Subscribe