Skip to main content

2 ஆயிரம் பெண்கள் திரண்டு உடைத்த டாஸ்மாக் கடையை மீ்ண்டும் திறக்க முயற்சி... பெண்கள் சாலைக்கு வந்ததால் பின்வாங்கிய அதிகாரிகள்

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு 2 ஆயிரம் பெண்கள் திரண்டு உடைத்த டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயன்ற தகவல் அறிந்து பெண்கள், பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தை தொடங்கியதால் டாஸ்மாக் கடை திறக்கவில்லை என்று அதிகாரிகள் பின்வாங்கி சென்றுவிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கடைவீதியில் கடந்த 2017 மே 20 ந் தேதிக்கு முன்பு வரை 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த கடைகளால் பள்ளி சிறுவர்களும் மது போதைக்கு அடிமையாகும் அவல நிலை உருவானது. மேலும் மாணவிகள், பெண்கள், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக இருந்தது. பல குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டது என்பதால் மாதர் சங்கம் மற்றும் கிராம பெண்கள் இணைந்து மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர், வட்டாட்சியர், போலீசார் என அனைவருக்கும் புகார் கொடுத்தும் பலனில்லை. அதனால் 2017 மே 20 ந் தேதி கடைவீதியில் பந்தல் அமைத்து டாஸ்மாக் கடைகள் மூடும் வரை காத்திருக்கிறோம் என்று மாதர் சங்கம் இந்திராணி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் 2 ஆயிரம் பெண்கள் ஈடுபட்டனர். இளைஞர்கள், மாணவர்கள் துணையாக நின்றனர்.

 

tasmac


இந்த தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் தொகுதி திமுக எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களில் கடைகளை அகற்றிக் கொள்ள உறுதி அளித்தனர். அந்த உறுதிமொழியை எழுதிக் கொடுக்கச் சொல்லி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பெண்கள் கேட்ட போது எழுதிக் கொடுக்காமல் வெளியேற முயன்றனர். எழுதிக் கொடுங்கள் என்று பெண்கள் அதிகாரிகள் காலில் விழுந்து அழுதனர். ஆனால் உதறிவிட்டு வெளியேற முயன்றனர். இந்த தகவல் போராட்டப் பந்தலில் இருந்த பெண்களுக்கு தெரியவர உடனே கிளம்பி வந்த பெண்கள் பேச்சுவார்த்தை நடந்த தனியார் திருமண மண்டபத்தை இழுத்து மூடி அதிகாரிகளை சிறைபிடித்தனர்.

அதன் பிறகும் அதிகாரிகள் கையெழுத்து போடாததால் வெகுண்டெழுந்த பெண்கள் கையில் கிடைத்த கல், கட்டை, போன்றவற்றுடன் ஊர்வலமாக சென்று 2 டாஸ்மாக் கடைகளையும் அடித்து உடைத்தனர். இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது, போலீசார் தடுத்தும் தடையை உடைத்துக் கொண்டு சென்றனர். கடைகள் உடைக்கப்பட்ட பிறகு மாவட்ட நிர்வாகம் கொத்தமங்கலத்தில் 2 டாஸ்மாக் கடைகளையும் மூடுவதாக அறிவித்ததுடன் இனிமேல் ஊராட்சி எல்லைக்குள் டாஸ்மாக் கடைகள் திறப்பதில்லை என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு பெண்கள் களைந்து சென்றனர்.

அதன் பிறகு கடந்த ஆண்டு ஒரு முறை மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க முயற்சிகள் நடந்தது. அப்போது ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தான் பெண்களால் உடைக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடந்துள்ளது. நேற்று இரவு இதனை அறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி, மாதர் சங்கம் இந்திராணி ஆகியோர் அதிகாரிகளிடம் இது பற்றி கேட்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது என்று பதில் சொன்னதால்.. அவசரமாக பெண்கள், இளைஞர்கள் கடைவீதியில் கூட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் அழைப்புக் கொடுத்தனர். அதன் படி இன்று காலை ஏராளமான பெண்கள், இளைஞர்கள் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன்.. டாஸ்மாக் கடை தற்போது திறக்கவில்லை. அதனால் களைந்து செல்லுங்கள் என்று உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

அதே நேரத்தில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்று சிலர் முழக்கமிட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய பெண்களை சிலர் தகாத வார்த்தையில் பேசியதாக ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி மற்றும் பெண்கள் புகார் கொடுத்தனர். டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்று ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

பெண்கள் உடைத்த டாஸ்மாக் கடையை மீ்ண்டும் திறக்க வந்த அதிகாரிகள் பெண்கள் போராட்டத்தால் பின்வாங்கிச் சென்றது அதிகாரிகள் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.