Skip to main content

உடைந்துபோன தடுப்பணையை வெடி வைத்து தகர்க்க முயற்சி! 

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

 

Try to blow up the broken barrier!

 

விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தளவானூர் என்ற இடத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுமார் ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை கடந்த ஆண்டு உடைந்தது; மீண்டும் கடந்த நவம்பர் 9- ஆம் தேதி அந்த அணைக்கட்டின் கரை மழை வெள்ள நீரின் காரணமாக அரிப்பெடுத்து  அடித்துச் செல்லப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நவம்பர் 10- ஆம் தேதி மணல் மூட்டைகள் கருங்கற்கள் அடுக்கி கரையின் அரிப்பை தடுக்க முற்பட்டனர். ஆனால், ஆற்று நீர் கரையை உடைத்துக்கொண்டு 50 மீட்டர் தூரத்திற்கு சென்று நிலத்துக்குள் புகுந்தது, இதை அடுத்து கரைப்பகுதி மேற்கொண்டு உடையாமல் தடுப்பதற்காக ஏற்கனவே உறைந்து சேதமடைந்த தடுப்பணை பகுதியை வெடி வைத்து தகர்த்து தண்ணீரில் செல்லும் பாதையை நேராக திருப்பி விட்டு கரை அரிப்பை தடுக்க முடிவு செய்தனர்.

 

இதற்காக, பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளர், முத்தையா, தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் உட்பட 10- க்கும் மேற்கொண்ட பொதுப்பணித்துறை குழுவினர், சேதமான அணைக்கட்டுப் பகுதியில் நேற்று காலை ஆய்வு செய்தனர். இதன் பிறகு வெடி வைத்து தகர்க்கும் ஊழியர்கள் 7 பேர் வரவழைக்கப்பட்டு, இதற்காக 100 ஜெலட்டின் குச்சிகள் 200 தோட்டாக்கள் கொண்ட வெடி மருந்துகள் மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு உடைந்த சேதமான அணைக்கட்டு விரிசல் பகுதிகளில் உள்ள இடைவெளியில் புகுத்தி பணிகளை முடித்து காலையில் மாவட்ட ஆட்சியர் மோகன் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பிறகு அணைக்கட்டில் வைக்கப்பட்ட வெடியை வெடிக்குமாறு அறிவுறுத்தினர்.

 

அதன்படி, ஜெலட்டின் குச்சிகள் வெடிக்கச் செய்யப்பட்டன. ஆனால் சற்றும் அசையாமல் சாய்ந்த நிலையிலேயே நின்றது. இதையடுத்து, சேதமடைந்த பகுதியை மேற்கொண்டு எந்த இடத்தில் வெடித்தால் முற்றிலும் இடிந்து விழும் என்பதை சரியாக ஆய்வு செய்து கண்டறிந்து, அதன்படி வெடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் அறிவுறுத்தி விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து மீண்டும் அணைக்கட்டை வெடி வைத்து முற்றிலும் தகர்க்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.