சிதம்பரம் அருகேசேத்தியாதோப்புகூட்டுரோடுஅருகே மீன்லாரிஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சத்தத்துடன் மீன்லாரிதிடீரென தீப்பிடித்து எரிந்தது. சத்தத்துடன்லாரிஎரிந்தது அந்தப்பகுதியில்பதற்றத்தை ஏற்படுத்த, இதுகுறித்துஅப்பகுதியிலிருந்தவர்கள்அளித்த தகவலின் பேரில்தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
இதுகுறித்த விசாரணையில், சீர்காழி அருகேஎடமணல்கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவர் வாகனத்தில் மீன் ஏற்றிக்கொண்டு கேரளா மாநிலம்வளஞ்சேரிக்குசென்று மீனை இறக்கிவிட்டு சீர்காழி அருகேயுள்ளபூம்புகாருக்குத்திரும்பியபோது திடீரெனடயர்வெடித்து மீன்லாரியில்தீ பற்றியதாக விசாரணையில் தெரியவந்தது. சாலையில் யாரும் அதிக நடமாட்டம் இல்லாததால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.