Skip to main content

திருச்சியில் 2 குழந்தைகளை விற்றதாக 8 பேர் கைது!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

திருச்சியில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு "குழந்தை விற்பனை இப்படித்தான் நடக்கிறதா?- அதிர்ச்சியை ஏற்படுத்தும் குழந்தை விற்பனை" என்ற தலைப்பில் நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
 

திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை குறித்து குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் சட்ட விரோதமாக 2 ஆண் குழந்தைகளை விற்றதாக 6 பெண்கள் உட்பட 8 பேர் திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காமராஜர் தெருவை சேர்ந்த தம்பதிகள் கோவிந்தன்- அஸ்வினிக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிறந்து 102 தினங்களே ஆன ஆண் குழந்தையை வளர்த்து வந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு போனில் தொடர்பு கொண்ட ஒருவர் அஸ்வினி சட்டவிரோதமாக ஒரு குழந்தையை வளர்ப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.

trichy two childrens eight person arrested police

அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அஜிம் தலைமையிலான குழந்தைகள் தடுப்பு பிரிவு போலீசார் அஸ்வினி விட்டிற்கு வந்து விசாரனை செய்தப் போது அஸ்வினி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் கடந்த 3- ஆம் தேதி திருவெறும்பூர் போலீசாருடன் சென்ற குழந்தைகள் தடுப்பு போலீசார் அஸ்வினியை கைது செய்தனர்.
 

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக திருச்சி அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்த திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புதூரை சேர்ந்த வேலம்மாள் (எ) வெண்ணிலா (42) என்பவரையும், அவருக்கு உதவிய சுருளி கோவில் தெருவை சேர்ந்த லூர்து மேரி (55) என்பவரையும் கைது செய்ததோடு அவர்களிடம் குழந்தையை ரூ 82 ஆயிரத்திற்கு விற்ற பெட்டவாய்த்தலை அருகே உள்ள  காமநாயக்கன்பாளையம் சேர்ந்த புவனேஸ்வரி (42) ஆகிய 5 பேரை கைது செய்து  திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் கோவிந்தன் மட்டும் தலைமறைவாகி உள்ளார். 


இதே போன்று திருவெறும்பூர் அருகே உள்ள பனையக் குறிச்சி விசாலாட்சி நகரை சேர்ந்தவர்  தர்மராஜ்(30). இவர் அந்தப் பகுதி வாட்ச் மேன் ஆகவும் அவரது மனைவி ராணி (27) கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
 

இவர்களுக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் ராணி கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால் கேட்பவர்களிடம் வயிற்றில் கட்டி உள்ளது என்று தனது கர்ப்பத்தை மறைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி விசாலாட்சி நகரில் உள்ள வீட்டிலேயே ராணி ஆண் குழந்தையை பெற்றுள்ளார். 
 

மறுநாள் ராணியை அந்த கட்டிடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில்சேர்ந்துள்ளார். அப்பொழுது ராணி தனது பெயர் சிவகாமி என்றும் தனது கணவர் பெயர் பாலசுப்பிரமணி என்றும் தான் துறையூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் தவறான விலாசத்தை கொடுத்துள்ளார்.
 

பின்னர் மருத்துவமனையில் இருந்து ராணியை மருத்துவர்கள் டிசார்ஜ் செய்வதற்கு முன்பு சொல்லிக்கொள்ளாமல் ராணி மருத்துவமனையை விட்டு வெளியேறி உள்ளார்.

இதனால் திருச்சி மருத்துவமனை அதிகாரிகள் துறையூர் அரசு மருத்துவமனை அதிகாரிகளை தொடர்பு கொண்டு துறையூர் விலாசத்தை கூறியுள்ளனர் அப்போது விசாரணை செய்து பார்த்ததில் அந்த விலாசம் போலி என தெரிய வந்துள்ளது.
 

இந்த நிலையில் சுகாதார செவிலியர் ஜெயசுந்தரி, ராணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ராணியை உடல்நிலை ரொம்ப மோசமாக இருந்தது. மேலும் ஜெயசுந்தரி ராணியிடம்  குழந்தை எங்கே கேட்டதோடு கேட்டதற்கு ராணி அக்கா வீட்டில் விட்டுள்ளதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறிய பதிலேயே கூறி உள்ளார்.

trichy two childrens eight person arrested police

பின்னர் ராணியை ஜெயசுந்தரி உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனை சேர்த்துள்ளார்.ஒரு வாரம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையுடன் வெளியேறியது சிவகாமி என்ற பெயரில் வெளியேறியது ராணி தான் என்பது  தெரியவருகிறது. அதன் அடிப்படையில் ஜெயசுந்தரி திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 
 

அதன் அடிப்படையில் சுகுமார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிறுவனம் சாரா பாதுகாப்பு அலுவலர் ஜெயசித்ரா தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து திருச்சி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் இன்ஸ்பெக்டர் அஜிம் ஆகியோர் நேரில் ராணி வீட்டில் விசாரனை செய்தப் போது 13 வருடங்களாக குழந்தைகள் இல்லாத தனது உறவினரான துறையூர் அருகே உள்ள ஆர் புதுப்பெட்டியை சேர்ந்த குமார் (30) சாரதா (27) தம்பதியிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
 
அதன் அடிப்படையில் ராணியையும், தர்மராஜையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் துறையூர் ஆர் புதுப்பட்டியைச் சேர்ந்த குமார் மற்றும் சாரதாவை கைது செய்ததோடு அவர்களிடம் ரூபாய் 7 ஆயிரம் பணம் கொடுத்து வாங்கியதை ஒத்துக்கொண்டனர் அதன் அடிப்படையில் அவர்கள் 4 பேரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.
 

இந்த இரண்டு வழக்குகளிலும் தொடர்புடைய 8 பேரை திருச்சி 6- வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள கோவிந்தனை திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

சின்னம் தொடர்பான விவகாரம்; ம.தி.மு.க. முக்கிய கோரிக்கை!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Matters relating to symbols; MDMK Important request

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (27.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடுகையில், “பொதுச்சின்னங்கள் பட்டியலில் இல்லாத பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு வழங்க சட்டவிதிகள் இல்லை. ஒரே மாநிலத்திற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் வைகோ தரப்பில் வாதிடுகையில், “வேறு மாநிலத்தில் மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் இந்த வழக்கிற்கு தீர்வு காண இயலாது. கடந்த 2010ஆம் ஆண்டு ம.தி.மு.க. அங்கீகாரத்தை இழந்துவிட்டது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தின் படி ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை வழங்க முடியாது. எனவே ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது’ எனத் தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. 

இந்நிலையில் தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்க திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ம.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்காமல் மாநில கட்சியாக உள்ள ம.தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ம.தி.மு.க. மாநிலக் கட்சியாக இருப்பதால் கேட்கும் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ம.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது. மார்ச் 30 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளது. அப்போது ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்படும் சின்னம் குறித்த விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.