Skip to main content

குப்பை தரம் பிரிக்கும் மையத்தை இடமாற்றம் செய்ய மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் 

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

trichy stem park issue makkal needhi maiam 

 

திருச்சியில் அமைந்துள்ள ஸ்டெம் பூங்காவின் முகப்பு பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தை  வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய மநீம கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

 

இது குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரும், திருச்சி மண்ணின் மைந்தருமான சர் சி.வி.ராமன் அவர்களது பெயரில் திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் பஞ்சக்கரை சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 15.55 கோடி ரூபாயில் பிரம்மாண்ட பொருட்செலவில் குழந்தைகளின் அறிவு திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது "ஸ்டெம் பூங்கா". ஆனால், பல கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்டெம் பூங்கா முகப்பு பகுதியில் திருச்சி மாநகராட்சியின் குப்பை தரம் பிரிக்கும் மையம் தொடர்ந்து துர்நாற்றத்துடன், கொசு உற்பத்தி மையமாக செயல்பட்டு வருகிறது.

 

திருச்சி மாநகர மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்க வேண்டிய திருச்சி மாநகராட்சி பூங்காவில் கட்டணம் கொடுத்து விளையாட வரும் சிறுவர், சிறுமியர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டாமா? மேலும் குழந்தைகளுக்கு பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவது என்பதோடு, குழந்தைகளுக்கு எளிதில் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரியாதா? இந்த ஸ்டெம் பூங்கா முகப்பு பகுதியிலேயே குப்பை தரம் பிரிக்கும் மையம் தொடர்ந்து செயல்பட்டால் எந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை கடும் துர்நாற்றம் மற்றும் கொசு கடிக்கிடையே இந்த பூங்காவிற்கு அழைத்து வருவார்கள்? காசு கொடுத்து எந்த பெற்றோர் நோய்த் தொற்றை தங்களது குழந்தைகளுக்கு விலைக்கு வாங்கத் துணிவார்கள்?

 

மேலும், இந்த குப்பை தரம் பிரிக்கும் மையத்தால் பொதுமக்களின் வரி பணத்தில் பல கோடி ரூபாய் பொருட்செலவில் துவங்கப்படும் ஒரு நல்ல திட்டம் அதன் இலக்கை அடைய முடியாமல் போக வாய்ப்புள்ளது. எனவே, மக்களின் இன்னல்களுக்கு உடனடி தீர்வு கண்டு வரும் திருச்சி மேயர் திரு.மு.அன்பழகன், சிறந்த மருத்துவரான திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள ஸ்டெம் பூங்கா முகப்பு பகுதியில் உள்ள இந்த குப்பை தரம் பிரிக்கும் மையத்தை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்து உரிய உத்தரவிட மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” எனக் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.