Skip to main content

திருச்சியில் கஞ்சா கும்பல் கொலைவெறி தாக்குதல்...ஒருவர் கொலை!

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

கடந்த செப்டம்பர்- 6 ஆம் தேதி காஜாப்பேட்டை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று, அந்த பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்து செல்போனை திருட முயற்சித்தது. அப்போது வீட்டில் இருந்தவர்களும் அருகில் இருந்த பொதுமக்களும் கும்பலை பிடித்து, அடித்து கண்டித்து அனுப்பியுள்ளனர்.

நள்ளிரவில் செல்போன் திருட வந்த கஞ்சா கும்பலை அடித்து விரட்டப்பட்ட நிலையில், அடுத்த நாள் காலை வீட்டிற்குள் புகுந்த கும்பல் வீட்டினுள் இருந்தவர்களை கொடூமான ஆயுதங்களால் தாக்கிவிட்டு மறைந்து சென்றனர். கஞ்சா கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த காமராஜ் (45) என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். 

TRICHY SOME GANG ENTIRE AT HOME AND THIEF TAKE MOBILE POLICE INVESTIGATION

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அனைவரும் அரசமரம் பெல்ஸ் கிரவுண்ட அருகே சாலை மறியலில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காமராஜ் சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் காமராஜின் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, இதற்கு காரணமான விமல்ராஜ்(21), விஜயபாபு(22) ஆகியோரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.

TRICHY SOME GANG ENTIRE AT HOME AND THIEF TAKE MOBILE POLICE INVESTIGATION


இறந்த கூலித்தொழிலாளி காமராஜிக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். காமராஜ் ஒருவர் வருமானத்தில் ஓடிக்கொண்டிருந்த குடும்பம், இப்போது ஆதரவு அளிக்க ஆளின்றி தவித்து வருகிறது. எனவே இறந்த காமராஜ் குடும்பத்திற்கும், அக்குழந்தைகளுக்கும் படிப்பு உள்ளிட்டவற்றிற்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டி அப்பகுதிமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

TRICHY SOME GANG ENTIRE AT HOME AND THIEF TAKE MOBILE POLICE INVESTIGATION

இந்தியாவிலே திருச்சி பாலக்கரை பகுதியில் தான் கஞ்சா அதிகம் விற்பனை ஆகுறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக ஏராளமான இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பாக பிரமதர் அலுவலகத்தில் புகார் சென்றதும். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் இந்த பிரச்சனையில் காவல்துறை சீரியஸாக  நடவடிக்கை எடுக்காமல், அலட்சிய போக்கினால் கஞ்சா கும்பல் கொலை வெறி தாக்குதலில் காமராஜ் இறந்துவிட்டார். இனி வரும் காலங்களில் இன்னொரு காமராஜ் இறக்கக்கூடாது என்று காவல்துறை கடும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.