திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழில் இல்லை என்று பயணியர்கள் புகார்.
ரயில் முன்பதிவு விண்ணப்பத்தில் ஆங்கிலம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகள் மட்டுமே இருப்பதால் தமிழ் மட்டும் தெரிந்த பயணியர்களுக்கு விண்ணப்ப தாளை பூர்த்தி செய்யமுடியாமல் கஷ்ட்டப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். ரயில் முன்பதிவு விண்ணப்பத்திலும் திட்டமிட்டே தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பயணியர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.