திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 100க்கு மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு திரண்டு கன்று குட்டிகளை கொண்டு வந்து குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிறிதளவு தண்ணீர் விட்டால் ஆடு மாடுகளுக்கு உதவும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.