Skip to main content

ஆபாச வீடியோ விவகாரத்தில் மீதம் உள்ள 59 பேர் எப்போது கைது?

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவில் குழந்தைகள் ஆபாசப்படம் பார்க்கப்படுவதாகவும், அதில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில், சென்னை முதலிடமும் வகிப்பதாகவும், இதில் தமிழகத்தில் திருச்சியில் இருந்து தான் அதிக அளவில் குழந்தைகள் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் பரபரப்பாக தகவல் வெளியானது.
 

அமெரிக்காவிலிருந்து ஒரு அறிக்கை மத்திய உள்துறைக்கு வந்தது இதன் அடிப்படையில் மத்திய அரசு தமிழக அரசிடம் நடவடிக்கை எடுக்க. தமிழகத்தில் குழந்தை ஆபாசப்படம் பார்ப்பவர்களின் பட்டியல் மற்றும் பதிவேற்றம் செய்யும் ஆட்களின் பட்டியலை மத்திய உள்துறையிடமிருந்து மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது.
 

தமிழகத்தில் முதல் நடவடிக்கையாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் குழந்தைகள் ஆபாச வீடியோவை வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு ஏ.சி. மெக்கானிக்காகத் தேடியவர் எந்த வேலையும் கிடைக்காமல் நாகர்கோவிலில் உள்ள ஒரு விடுதியில் துப்புறவு பணியாளராக வேலை செய்தவர். கடந்த மாதம் வேலைவிட்டு மீண்டும் திருச்சிக்கு வந்தார்.

TRICHY POLICE VIDEO ISSUES POLICE FACEBOOK, WHATSAPP SEARCH IP ADDRESS


திருச்சியில் வேலை தேடிக்கொண்டிருந்தவர் தற்போது பெரும்பாலான நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுவதையே வேலையாக கொண்டிருந்தார். அதில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்தும், அதனை தனது நண்பர்கள் உள்பட பலருக்கும் பகிர்ந்து வந்துள்ளார். இதில் மெசன்ஜர் மூலம் ஒரு குழுவை தயார் படுத்தி அதில் 300- க்கும் மேற்பட்ட நபர்களை குழுவில் இணைத்து. அவர்களுக்கு தொடர்ச்சியாக தான் பார்த்து ரசித்த சிறுவர் ஆபாச வீடியோக்கள் மற்றும், புகைப்படங்களை அவர் பதிவேற்றம் செய்திருக்கிறார். இந்த குழுவில் பெரும்பாலும் சென்னையே சேர்ந்தவர்கள் இருப்பது குறிப்பிடதக்கது. இதுகுறித்து திருச்சியை சேர்ந்த தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

கிறிஸ்டோபர் அல்போன்ஸ் தனது அடையாளத்தை மாற்றி, பல்வேறு புனை பெயர்களை பயன்படுத்தியுள்ளார். அதில் நிலவன், ஆதவன், வளவன் ஆகிய பெயர்களில் இந்த ஆபாச வீடியோக்களை வெளியிட்டுருப்பது தெரியவந்துள்ளது.
 

இதற்கு இடையில் குழந்தைகள் ஆபாச வீடியோ படங்களை பார்ப்பதும், அதை பதிவேற்றம் செய்யவதும் சட்டப்படி குற்றம் என்று போலீஸ் பொது அறிவிப்பு வெளியிட்ட பின்னரும் தொடர்ச்சியாக கிறிஸ்டோபர் அல்போன்ஸ் குழந்தைகள் ஆபாசப்படத்தை அவர் நடத்தும் மெசேன்ஜர் குழுவில் பதிவேற்றம் செய்து இருக்கிறார். இதன் பிறகு இதை கண்காணித்த

இதுதொடர்பாக சமூக ஊடகவியல் போலீஸ்காரர் முத்துப்பாண்டி என்பவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதன்பேரில் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் திருச்சி வந்த கிறிஸ்டோர் அல்போன்சை கையும் களவுமாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸ் அண்ணன் பாபு பாலியல் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து போனார் என்பது குறிப்பிடதக்கது.
 

போலீஸாரின் விசாரணையில் கிறிஸ்டோபர் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆபாச வீடியோக்கள் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டு அதற்கே அடிமையாகி அதிலிருந்து மீள முடியவில்லை என்றும், இதனாலே குழந்தைகள் வீடியோக்களை பார்த்து அதை நண்பர்களுக்கு பகிர்ந்தேன் என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். இவரை கைது செய்து 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளார்கள். இந்த குற்றம் நிரூக்கப்பபட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். சட்டவல்லூனர்கள்.
 

சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சுமார் 3,000- க்கும் அதிகமானோர் போலி கணக்குகளில் சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது.
 

இதில் திருச்சியில் மட்டும் 60 பேர் ஆபாச படங்களை வெளியிட்டு இருப்பதும், தற்போது 1 வரை கைது செய்து இருப்பதும் மற்ற 59 பேர் எப்போது கைது செய்யப்படுவார்கள் என்பதே தற்போது திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.