Skip to main content

திருச்சியில் ஒரே நாளில் 14 போலீசாருக்கு கரோனா!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020


 

trichy police coronavirus admit at hospital

 

திருச்சி மாவட்டத்தில் நேற்று (22/06/2020) ஒரே நாளில் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

 

கரோனோ பாதிப்பு ஏற்கனவே திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனரின் டிரைவருக்கு உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து துணை கமிஷ்னருடன் செல்லும் அதிரடி படையினருக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர்களில் 14 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று காரணமாக கே.கே.நகரில் உள்ள காவலர் குடியிருப்பு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதேபோல் திருச்சி மாநகரின் 5- ஆவது வார்டு பாரதிநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி கிழக்கு போக்குவரத்து அலுவலகம் சஞ்சீவி நகரில் உள்ளது. அந்த அலுவலகத்திற்குக் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சையிலிருந்து மோட்டர் வாகன ஆய்வாளர் ஒருவர் வந்து சென்று உள்ளார். அவர் மீண்டும் தஞ்சை சென்றவுடன் அவருக்குச் சோதனை செய்த போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

இதைக் கேள்விப்பட்ட திருச்சி கிழக்கு போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் பீதி அடைந்து அங்குள்ள ஊழியர்கள் பரிசோதனை செய்து கொண்டனர். அதில் இரண்டு ஊழியர்களுக்கு கரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும். அந்த அலுலகமே முடங்கிப் போனது. இதே போன்று ஒரு வழக்கு விசாரணைக்காக முசிறி காவல்நிலையத்திற்கு வெள்ளுர் பகுதியைச் சேர்ந்த சிலர் வந்தனர். விசாரணைக்கு வந்த ஒருவரின் மனைவிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து முசிறி காவல்நிலையம் மூடப்பட்டு அங்கிருந்து காவலர்கள் அனைவரும் முசிறி திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

 

இப்படி அதிரடியாக கரோனா பரவல் இருந்தாலும், திருச்சியில் மட்டும் இதுவரை 20,000- க்கும் மேற்பட்டோருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்துள்ளது சுகாதாரத்துறை. அதில் 266 பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 5 பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 80- க்கும் மேற்பட்டோர் தொடர்  சிகிச்சையில் இருக்கிறார்கள். 

 

நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திருச்சி மாநகராட்சி சார்பில் 7 இடங்கள் கரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்தும், முகாம்களுக்கு திருச்சியில் ஶ்ரீரங்கம் பி.எஸ். இந்து பள்ளி, தெற்கு பாண்டமங்களம் மாநகராட்சிப்பள்ளி, ஏர்போர்ட் காமராஜர் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி, காட்டூர் பாப்பாகுறிச்சி மாநகராட்சி பள்ளி, செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளிகள் உட்பட 7 இடங்களைத் தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்.

 

http://onelink.to/nknapp

 

'திருச்சியில் கரோனாவின் பரவல் புயல்வேகத்தில் பரவிக்கொண்டு இருப்பதால் திருச்சியில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்' என இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் பொன்முருகேஷன் கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்