Skip to main content

தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் பேராசிரியர் பணி நேர்காணலில் முறைகேடு ! குமுறும் பேராசிரியர்கள் !

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

இந்தியாவில் 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தில் ஒரு தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி உள்ளது. 2012 ஆம் ஆண்டு, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, துணை வேந்தர் பேராசிரியர் கமலா சங்கரன்.

 

trichy national law university controversy

 

 

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் இரண்டு பேராசிரியர், நான்கு இணைப் பேராசிரியர், 12 துணைப் பேராசிரியர் என மொத்தம் 18 பணியிடங்களுக்கான நேர்காணல் கடந்த நவம்பர் ஒன்பது மற்றும் பத்தாம் தேதி நடத்தப்பட்டது.

இந்த நேர்காணலில் திட்டமிட்டு அரசாங்கத்தின் நடைமுறைகளை, பல்கலைக்கழக நிதிக் குழு வழிகாட்டுதல்கள் அத்தனையும் மீறி ஒரு சட்டக்கல்லூரி நேர்காணலே விதிமுறை மீறி முறைகேட்டுடன் நடத்தியுள்ளார்கள் என்று அங்கு உள்ள பேராசிரியர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், பதினெட்டு பணியிடங்களை நிரப்ப மொத்தம் நாற்பது நபர்களே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஒரு பணியிடத்திற்கு குறைந்தது பதினைந்து நபர்களை அழைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிதிக் குழு மிகத் தெளிவாக வழிகாட்டுகாட்டுதல்கள்கள் வழங்கியிருக்கும்போது தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அதனை மிகவும் சாமர்த்தியமாக கைக்கழுவியிருக்கிறது.

நேர்காணலிற்கான தேர்வுக்குழுவில் பட்டியல் சாதியினரைச் சேர்ந்தவர் ஒருவர் அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து கட்டாயமாக இருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிதிக் குழு வரையறுத்திருக்கிறது. பல்கலைக்கழகத்தில் அப்பிரிவிணைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இருந்த போதிலும் அவர்களில் யாரும் தேர்வுக் குழுவில் அமர்த்தப்படவில்லை.

பட்டியல் சாதி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பங்கினை வழங்காத நிறுவனங்களை பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் வன்மையாக கண்டித்தது குறிப்பிடதக்கது.

நேர்காணலிற்கான தேர்வுக்குழுவில் புது டில்லியில் அமைந்திருக்கும் இந்திய சட்ட நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் மனோஜ் குமார் சின்ஹா, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கமலா சங்கரன், பெங்களூரில் அமைந்திருக்கும் கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிஜு ஜோசப், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வி.ஜி ஹெகிடே, காரைக்குடி அழகப்பபா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ந. ராஜேந்திரன், திருச்சி சட்டக் கல்லூரியின் முதல்வர் ம.இராஜேஸ்வரன் என ஆறு பேர் அமர்த்தப்பட்டனர். 

இந்நிலையில் சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் எதிராக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டத்துறை பேராசியர்களுக்கு பணியில் சேருவதர்கான அழைப்புக் கடிதம் வழங்குவது குறித்தான அவசர நிர்வாகக் குழு கூட்டம் வருகிற பதிநான்காம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. பணி நியமன அறிவிக்கையில் ஒரு பணியிடத்திற்கு எத்தனை பேர் நேர்காணலிற்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

மொத்தமாக எவ்வளவு விண்ணப்பங்கள் வந்தன என்பது குறித்தும், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சமூகநீதிக் கோட்பாடான அறுபத்தி ஒன்பது விழுக்காடு இடஒதுக்கீட்டின்படி சாதிவாரியான வரிசையின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களும் தெரியப்படுத்தப்படவில்லை. பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தில் இது குறித்த செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டின் சமூகநீதிக் கோட்பாட்டைக் குழி தோண்டி புதைப்பதற்காகவே இவ்வேற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கான பேராசிரியர் பணியிடங்களுக்கு தேசிய தகுதித் தேர்வு அல்லது மாநில தகுதித் தேர்வினை முடித்திருப்பது கட்டாயம். தேசிய தகுதித் தேர்வு அல்லது மாநில தகுதித் தேர்வினை முடித்த அனைவருக்கும் நேர்காணல் கடிதம் அனுப்பப்படவில்லை.

ஒரு பணியிடத்திற்கு எத்தனை பேர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்று பணி அறிவிக்கையில் குறிப்பிடாத பட்சத்தில் பல்கலைக்கழகம் தான்தோன்றித்தனமாக முடிவெடுக்க முடியாது. மாறாக தகுதி பெற்ற அனைவரையும் நேர்காணலுக்கு அழைக்க வேண்டும்.

குறிப்பாக பொருளியல் துறையில் ஐந்து பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். வரலாற்று துறையில் இருவர் மட்டும் அழைக்கப்பட்டனர். இரண்டு துறைகளிலும் தலா ஒரு காலியிடங்கள் இருப்பது குறிப்பிடதக்கது.

இவ்விடத்தில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் உச்சநீதிமன்ற தீர்ப்பினை அவமதித்துள்ளது. 2021 லிருந்து வெளியிடப்படும் துணைப் பேராசிரியர் பணி அறிவிக்கைகளில் முனைவர் பட்டம் கட்டாயம் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்திருக்கிறது.

ஆனால் இங்கே மதிப்பீட்டிற்கான நூறு மதிப்பெண்களில் இப்போதே முனைவர் பட்டத்திற்கு முப்பது மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் பிற்போக்குத்தனமான மதிப்பெண் வழங்கீட்டு முறையாகும். பல்கலைக்கழக மானியக் குழு, மதிப்பெண் வழங்கீட்டு முறைக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிற போது, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அதனை கொஞ்சம் கூட கண்டுகொண்டதாக இல்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஐந்தாம் தேதி தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தால் ஒரு பணிசேர்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. பேராசிரியர், இணை பேராசிரியர், இணை துணை பேராசிரியர், இணை நூலகர், துணை நூலகர் என இருபத்தி மூன்று பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை அப்பல்கலைக்கழகத்தின் இணை பதிவாளர் வெளியிட்டுள்ளார். இதில் முறையான விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என்றும், இதை எதிர்ந்து மதுரை உயர்நநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது விசாரணைக்கு எடுத்துக்களப்பட்டுள்ளது.

இத்தனை விதிமீறல்களையும் தமிழகத்தின் புதிய தலைமைநீதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஏ.பி.சாஹி மற்றும் முதல்வரும் சட்ட அமைச்சரும் தலையிட்டு கமலா சங்கரன் வெளியிட்ட பணி அறிவிக்கையினையும், நடத்தி முடிக்கப்பட்ட நேர்காணல்களையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது நீதியின் மீது நம்பிக்கை கொண்ட தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் அனைத்து பேராசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"வேங்கை வயல் உட்பட எந்த வாக்குப்பதிவு மையத்திலும் மறு வாக்குப்பதிவு இல்லை" - திருச்சி ஆட்சியர்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Trichy Collector says There is no re-voting in any polling center

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக 18 -வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு முடிவுற்றது. இதனை தொடர்ந்து வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட் மின்னணு வாக்கு இயந்திரங்கள், விவி பேட் சீல் வைக்கப்பட்டு வாக்குச்சாவடியில் இருந்துவாக்கு எண்ணிக்கை மையமான ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, கட்டுப்பாட்டு இயந்திர அறையில் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் பொது பார்வையாளர் தினேஷ்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார்  வாக்குப்பட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை அடைத்து அனைத்து கட்சியினர் முன்னிலையிலும் சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார் கூறியதாவது:-ஒவ்வொரு வாக்கு சாவடிகயிலிருந்தும் வாக்கு இயந்திரங்கள் நேற்று ஜமால் முகமது கல்லூரியில் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 67.42% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து இருந்தால் கண்டிப்பாக இன்னும் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கும். நகர்ப்புற பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைவாகத்தான் உள்ளது.

நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சில கோளாறுகள் காரணமாக விவிபேட் மட்டும் கட்டுப்பாட்டு கருவிகள் மாற்றம் செய்யப்பட்டது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில்  விதிமீறல்கள் தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நேரத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 5.8 கோடி , தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் 8.6 கோடி வரை பறிமுதல் செய்துள்ளோம். அனைத்திற்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானவரித்துறையினர் அதற்கான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

மூன்றடுக்கு பாதுகாப்பு பணி இங்கு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு அடுக்கில் துணை ராணுவ கம்பெனியை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். 24 மணி நேரமும் சிசிடிவி கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு நாளில் சில நிறுவனங்கள் செயல்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக ட்விட்டரில் கூட நமக்கு ஒரு புகார் வந்திருந்தது. உடனடியாக அந்த நிறுவனத்தை அணுகி விடுமுறை விட சொல்லி ஏற்பாடு செய்தோம். திருச்சி மக்களவைத் தொகுதியில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் உட்பட, எந்த வாக்கு பதிவு மையத்திலும் மறுவாக்குப் பதிவு இல்லை. திருச்சி மக்களவைத் தொகுதியில், 67.42 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.