கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; மூன்று பேர் பலி

trichy mathur car incident police investigation started

திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

சேலத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற காரும், காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக நோக்கி வந்த காரும் மாத்தூர் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மகிஷா ஸ்ரீ (வயது 12), சுமதி (வயது 45), டிரைவர் கதிர் (வயது 47) ஆகிய மூன்று பேர் பலியாகினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாத்தூர் போலீசார் படுகாயம் அடைந்த 9 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்கள் 3 பேர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை விபத்தால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

car Karaikudi police Pudukottai Salem trichy
இதையும் படியுங்கள்
Subscribe