Skip to main content

'மக்களுக்கு உதவி செய்தால் வழக்குப் போட்டு மிரட்டுகிறார்கள்'- திமுக பிரமுகர் குற்றச்சாட்டு!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020


திருச்சி மாவட்டத்தில் இதுவரை 50 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை பகுதியில் ஒருவருக்குப் புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
 

TRICHY LOCKDOWN PEOPLES DMK LEADER POLICE



இந்த நிலையில் நாச்சிக்குறிச்சிச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பேக்கிரியைத் திறந்து வைத்ததாகவும், அதை சோமரசம்பேட்டை வி.ஏ.ஓ. மூட சொன்னதாகவும், அப்போது அங்கிருந்த திமுக விவசாயி தொழிலாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர் துரைபாண்டியன் (இவரது மனைவி சோமரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர்) பேக்கரி திறக்க அனுமதி வாங்கிவிட்டேன் மூட முடியாது என வி.ஏ.ஓ. பிரேம் ஆனந்தை மிரட்டியதாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன. 

இது குறித்து நாம் துரைபாண்டியனிடம் பேசிய போது, கரோனா பிரச்சனை வந்ததிலிருந்து எங்க சோமரசம் பேட்டையில் தான் திருச்சியிலே முதல்முறையாக கிருமி நாசினியை டிரோன் மூலம் அடித்தோம். எங்கள் பகுதியில் தினக்கூலிகள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் ஏழ்மையில் உள்ள அனைவருக்கும் தினமும் உதவி செய்து வருகிறோம். அது என்னோட சொந்த பணத்தில் இருந்து செய்து வருகிறோம். தற்போது தடைசெய்யப்பட்ட பகுதியில் 1500 பேர் இருக்கிறார். அவர்களுக்குத் தினமும்  பிரெட் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். 

 

TRICHY LOCKDOWN PEOPLES DMK LEADER POLICE


உள்ளூரில் உள்ள அந்த பிரெட் கடையில் இருந்து கொடுக்கிறோம். அந்த பிரெட் கடைக்காரர் கடையை மூடிவிட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டிய பிரெட் பொருட்களை ஊராட்சி அலுவலகம் மூடியிருந்தால் அவர் கடையின் முன்பு அடிக்கி வைத்திருந்தார். அந்தக் கடையின் அருகே தான் காவல்நிலையம் உள்ளது. நாங்கள் பிரெட் கொடுப்பது, நிவாரண உதவி கொடுப்பது இவையெல்லாம் அரசாங்க அதிகாரிகள் எல்லோருக்கும் தெரியும்.
 

http://onelink.to/nknapp


ஆனால் இதை எல்லாம் தெரிந்தே திட்டமிட்டு இவர் கடையைத் திறந்து வியாபாரம் செய்கிறார். நான் மிரட்டுகிறேன் என்று பழி வாங்கும் நோக்கத்தோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்கிறார்கள்.
 

TRICHY LOCKDOWN PEOPLES DMK LEADER POLICE


இந்தக் காலங்களில் போர்க்கால அடிப்படையில் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கும் நிலையில் எங்கள் மீது திட்டமிட்டு வழக்குப் பதிவு செய்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி அலுவலகத்தின் உள்ளே இருக்கும் வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வேலையும் பெண் ஒருவர் நள்ளிரவு வரை வி.ஏ.ஓ. அலுவலகததில் தொடர்ந்து இருப்பதைப் பார்த்து நான் ஏன் பெண்ணை இரவு நேரங்களில் இங்கே தங்க வைக்கிறீர்கள் எனறு சத்தம் போட்டேன். அதை மனதில் வைத்து இப்படி என் மீது புகார் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.