திருச்சி சட்டக்கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி. மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தவச்செல்வன் தப்பி ஓடிய நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றன.
பட்டப்பகலில் சட்ட கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திருச்சி மாநகர காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.