Skip to main content

போலீசுக்கு லஞ்சம் கொள்ளையன் முருகனின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

2018- ஆம் ஆண்டு சென்னை அண்ணாநகர் பகுதியில் 19- க்கும் மேற்பட்ட தொடர் கொள்ளைகள் நடந்தன. அனைத்திலும் கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளை குறித்த விசாரணையில் போலீஸார் குறிப்பிட்ட நகர்வுக்கு மேல் செல்ல முடியாத அளவுக்கு சாமர்த்தியமாகச் கொள்ளையர்கள் செயல்பட்டது தெரியவந்தது.
 

இதுகுறித்து விசாரணை நடத்திக் கொள்ளையர்களைப் பிடிக்க அண்ணா நகர் துணை ஆணையர் சுதாகர் உத்தரவின் பேரில் ஏப்ரல் மாதம் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஏப்ரல் 15- ஆம் தேதி, முக்கியத் தகவல் ஒன்று கிடைத்ததது. அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து செயல்பட்டனர். 9 குற்றவாளிகள் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
 

கொள்ளையர்கள் அனைவரும் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய இடங்களைச் சேர்ந்த இவர்கள் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் ஆவர். இதில் போலீஸாரின் தீவிர தேடுதலில் மணிகண்டன், ரகு, மூர்த்தி, கோபால் ஆகியோர் சிக்கினர்.
 

இவர்களில் சிலர் கொள்ளையடித்த பொருட்களை வாங்கி விற்றுத்தரும் புரோக்கர்கள். அவர்களிடம் தீவிரமாக நடத்திய விசாரணை காரணமாக 4 மாதங்களுக்குப் பிறகு முக்கிய குற்றவாளியான தினகரன் (31) மற்றும் அவருக்கு உதவிய கூட்டாளிகள் லோகநாதன், காளிதாஸ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனை மட்டும் போலீசாரால் நெருங்க முடியவில்லை. தொடர்ச்சியாக 50 முறைக்கு மேல் முயற்சி செய்தும் அது தோல்வியில் முடிந்தது. 

trichy lalithaa thief murgan police get it amount police investigation



இந்த நிலையில் திருச்சி லலிதா ஜீவல்லரி 13 கோடி கொள்ளை வழக்கில் கொள்ளையன் பெங்களூரு நீதிமன்றத்தில் வேற ஒரு வழக்கில் சரண் ஆகி பெங்களூர் சிறையில் இருந்தார்.அதை தொடர்ந்து சிறையிலிருந்து 6 நாள் போலீஸ் காவலில் எடுத்தது காவல்துறை. பின்பு திருச்சியில் பதுக்கி வைத்திருக்கும் நகைகளை தோண்டி எடுக்க பெங்களூர் போலீஸ் முருகனை அழைத்து வந்த போது, திருச்சி தனிப்படையினர் விசாரணையில் கொள்ளையன் முருகன் சொன்ன வாக்குமூலம் போலீஸ் வட்டராத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

பெரம்பலூரில் நடைபெற்ற விசாரணையில் கொள்ளையன் முருகன் கொடுத்த வாக்குமூலத்தில் சென்னை அண்ணாநகரில் ஒரு வீட்டை உடைத்து நூற்றுக்கணக்கான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியது என் தலைமையிலான கும்பல் தான். இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட தினகரன், காளிதாஸ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நான் மட்டும் தலைமறைவாகிவிட்டேன். அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் தொடர்ந்து என்னை தேடி விசாரித்து கொண்டிருந்தனர்.
 

இந்த நிலையில் நான் ஒருநாள் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தொடர்பு கொண்டு என்னை எல்லாரும் தேடுவதை விட்டுட்டாங்க, நீங்கள் மட்டும் ஏன் தொந்தரவு செய்றீங்க… உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என்று பேரம் பேசி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்த காவலர்கள் வில்சன் ஜோசப் ஆகியோருக்கு 10 லட்சம் பேரம் பேசி ஒருவனிடம் கொடுத்தேன். அதிலும் திருச்சி நம்பர் 1 டோல்கேட் சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் எடுத்த பணத்தை கொடுத்தேன்.
 

அதேபோல லலிதா ஜீவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த நகையில் 4.5 கிலோ தங்கத்தை விற்று, அதிலிருந்து 20 லட்சத்தை எடுத்துக்கொண்டு தற்போது புளியந்தோப்பில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தேன். சென்னை புறநகர் பகுதியில் உள்ள 99 காபி ஷாப் கடையின் வாசலில் என்னுடைய காரில் நானே ஓட்டிச் சென்ற பணப்பையை அங்கே வைத்து விட்டு வந்தேன். பிறகு அதனை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி எடுத்துச் சென்றார்.
 

உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் அங்கு உள்ள சிசிடிவி கேமராவை பதிவான காட்சிகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று முருகன் அலட்டிக்கொள்ளாமல் சொன்னதும், விசாரித்த போலீசாருகே வியர்த்து விட்டது. முருகனின் அதிரடி வாக்குமூலத்தை போலீஸார் வீடியோவுடன் பதிவு செய்து செய்திருக்கிறார்கள். இன்னும் முருகனை தமிழக போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்கும் போது இன்னும் என்னவெல்லாம் சொல்ல போகிறனோ என்று அவனிடம் இருவரை வாங்கி திண்ற அதிகாரிகள் திக்திக் பயத்துடன் இருக்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.