Skip to main content

முன்னணி அரசியல் கட்சியில் சேர திட்டம் போட்டிருந்தேன்- கொள்ளையன் முருகன் ஓப்பன் வாக்குமூலம்!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி, திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளை சம்பவத்தில், 28 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

 

இந்த கொள்ளையில் திருவாரூரில் மணிகண்டன் என்பவர் சிக்கினார். பின்பு முருகன் சம்மந்தப்பட்டிருப்பது தெரிந்த நிலையில், முருகன் பெங்களூரில் வேறு ஒரு வழக்கில் ஆஜராகி திருச்சி போலீசுக்கு போலீஸ் கஸ்டடி கிடைப்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. கிட்டதட்ட 55 நாட்களுக்கு பிறகு திருச்சி போலீசுக்கு கஸ்டடி கிடைத்தது.


அதிலும் 14 நாட்கள் போலீஸ் கஸ்டடி வேண்டும் என்று கேட்ட நிலையில், திருச்சி நீதிமன்றம் 7 நாள் கஸ்டடி கொடுத்தது. நீதிபதியிடம் முருகன் எனக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதால், டாக்டர் பரிசோதனையுடன் விசாரணை செய்ய சொல்லுங்கள் என்று கேட்க, அதற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.

trichy lalitha jewellery thief murugan statement police custody


இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் முருகன் எந்த வித பதட்டமும் இல்லாமல், லலிதா ஜுவல்லரி கடையின் சுவரை துளையிட எங்களுக்கு நான்கு நாள் ஆனது. கொள்ளையடித்த நகைகளை எடுத்த பின் காரில் மதுரையிலுள்ள கணேசன் வீட்டிற்கு சென்றோம். அங்கு எடை மிஷின் வைத்து சுரேஷ் கணேசன் நான் ஆகியோர் நகைகளை பிடித்துக்கொண்டோம்.


பின்னர் நானும் சுரேஷும் காரில் நீடாமங்கலம் வந்தோம். நீடாமங்கலத்தில் சுரேஷ் இறக்கிவிட்டு நான் சென்னை கிளம்பினேன். இதனிடையே வரும் போது செல்போனில் பேசி மணிகண்டனை வரவழைத்தோம். சுரேஷ் பங்கு பிரித்த நகையுடன் மணிகண்டனின் பைக்கில் சென்றார். சென்னை செல்லும் வழியில் போலீஸ் சோதனை நடத்தினால் மாட்டிக் கொள்வேன் என்பதால் பெரம்பலூரில் வனப்பகுதியில் ஓரிடத்தில் நகைகளை மண்ணில் வைத்து புதைத்தேன். எப்போதும் மண்ணில் புதைத்து வைப்பது எனக்கு கைவந்த கலை. செலவுக்கு கொஞ்சம் நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.


இதனிடையே போலீசில் மணிகண்டன் சிக்கி விட்டான். ஆனால் மணிகண்டன் உடன் வந்த சுரேஷ் தப்பி ஓடிவிட்டான். தடயமே இல்லாமல் கொள்ளையடிப்பது தான் எனது ஸ்டைல் மணிகண்டன் மட்டும் பிடிக்காவிட்டால், எனது லெவலே வேறு மாதிரியாக இருந்திருக்கும். தமிழ் சினிமா தயாரிப்பாளராக இருப்பேன். எனக்கு அரசியல் ஆசை உள்ளது. ஆனால் நேரடியாக அரசியலில் வெற்றி வெற்றிபெறுவது கடினம் என்பது எனக்கு தெரியும்.

murgan


அதனால் தான் நகை கொள்ளையில் ஈடுபட்டேன். இந்த நகைகளை வைத்து சினிமாவில் ஜெயித்து விட்டு, அதன் பிறகு ஏதாவது முன்னணி அரசியல் கட்சியில் சேர திட்டம் திட்டமிட்டிருந்தேன் மணிகண்டன் சிக்கி விட்டதால் வேறு வழியின்றி நானும் சரணடைய வேண்டிய நிலை. எனது அக்கா மகன் சுரேஷ் நடிகர் மாதிரி இருப்பார் அவரை நடிக்க திட்டமிட்டேன்.


தமிழ் சினிமா எடுப்பது சிரமமாக இருந்ததால், சுரேசை ஹீரோவாக வைத்து தெலுங்கில் 2 படம் எடுத்தேன். அது பெயிலியர் ஆகிவிட்டது. லலிதா ஜுவல்லரி நான் கொள்ளையடித்த நகைகளை சிலர் போலீசாருக்கு பங்கு கொடுத்துள்ளேன். நகைகளை வாங்கிய போலீசாரின் பெயர்களில் சொல்ல விரும்பவில்லை.


வேலூர் சிறையில் தான் எனக்கும் கணேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவன் நகைகளை உருக்கி விற்பதில் கில்லாடி. இதனால் அவனை பங்குதாரராக சேர்த்துக் கொண்டேன். ஏழைகளின் வீடுகளிலும் கடைகளிலும் திருட மாட்டேன் நகை கடைகள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களில் தான் கைவரிசை காட்டினேன் என்று முருகன் விலாவாரியாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.





 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.