Skip to main content

முன்னணி அரசியல் கட்சியில் சேர திட்டம் போட்டிருந்தேன்- கொள்ளையன் முருகன் ஓப்பன் வாக்குமூலம்!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி, திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளை சம்பவத்தில், 28 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

 

இந்த கொள்ளையில் திருவாரூரில் மணிகண்டன் என்பவர் சிக்கினார். பின்பு முருகன் சம்மந்தப்பட்டிருப்பது தெரிந்த நிலையில், முருகன் பெங்களூரில் வேறு ஒரு வழக்கில் ஆஜராகி திருச்சி போலீசுக்கு போலீஸ் கஸ்டடி கிடைப்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. கிட்டதட்ட 55 நாட்களுக்கு பிறகு திருச்சி போலீசுக்கு கஸ்டடி கிடைத்தது.


அதிலும் 14 நாட்கள் போலீஸ் கஸ்டடி வேண்டும் என்று கேட்ட நிலையில், திருச்சி நீதிமன்றம் 7 நாள் கஸ்டடி கொடுத்தது. நீதிபதியிடம் முருகன் எனக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதால், டாக்டர் பரிசோதனையுடன் விசாரணை செய்ய சொல்லுங்கள் என்று கேட்க, அதற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.

trichy lalitha jewellery thief murugan statement police custody


இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் முருகன் எந்த வித பதட்டமும் இல்லாமல், லலிதா ஜுவல்லரி கடையின் சுவரை துளையிட எங்களுக்கு நான்கு நாள் ஆனது. கொள்ளையடித்த நகைகளை எடுத்த பின் காரில் மதுரையிலுள்ள கணேசன் வீட்டிற்கு சென்றோம். அங்கு எடை மிஷின் வைத்து சுரேஷ் கணேசன் நான் ஆகியோர் நகைகளை பிடித்துக்கொண்டோம்.


பின்னர் நானும் சுரேஷும் காரில் நீடாமங்கலம் வந்தோம். நீடாமங்கலத்தில் சுரேஷ் இறக்கிவிட்டு நான் சென்னை கிளம்பினேன். இதனிடையே வரும் போது செல்போனில் பேசி மணிகண்டனை வரவழைத்தோம். சுரேஷ் பங்கு பிரித்த நகையுடன் மணிகண்டனின் பைக்கில் சென்றார். சென்னை செல்லும் வழியில் போலீஸ் சோதனை நடத்தினால் மாட்டிக் கொள்வேன் என்பதால் பெரம்பலூரில் வனப்பகுதியில் ஓரிடத்தில் நகைகளை மண்ணில் வைத்து புதைத்தேன். எப்போதும் மண்ணில் புதைத்து வைப்பது எனக்கு கைவந்த கலை. செலவுக்கு கொஞ்சம் நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.


இதனிடையே போலீசில் மணிகண்டன் சிக்கி விட்டான். ஆனால் மணிகண்டன் உடன் வந்த சுரேஷ் தப்பி ஓடிவிட்டான். தடயமே இல்லாமல் கொள்ளையடிப்பது தான் எனது ஸ்டைல் மணிகண்டன் மட்டும் பிடிக்காவிட்டால், எனது லெவலே வேறு மாதிரியாக இருந்திருக்கும். தமிழ் சினிமா தயாரிப்பாளராக இருப்பேன். எனக்கு அரசியல் ஆசை உள்ளது. ஆனால் நேரடியாக அரசியலில் வெற்றி வெற்றிபெறுவது கடினம் என்பது எனக்கு தெரியும்.

murgan


அதனால் தான் நகை கொள்ளையில் ஈடுபட்டேன். இந்த நகைகளை வைத்து சினிமாவில் ஜெயித்து விட்டு, அதன் பிறகு ஏதாவது முன்னணி அரசியல் கட்சியில் சேர திட்டம் திட்டமிட்டிருந்தேன் மணிகண்டன் சிக்கி விட்டதால் வேறு வழியின்றி நானும் சரணடைய வேண்டிய நிலை. எனது அக்கா மகன் சுரேஷ் நடிகர் மாதிரி இருப்பார் அவரை நடிக்க திட்டமிட்டேன்.


தமிழ் சினிமா எடுப்பது சிரமமாக இருந்ததால், சுரேசை ஹீரோவாக வைத்து தெலுங்கில் 2 படம் எடுத்தேன். அது பெயிலியர் ஆகிவிட்டது. லலிதா ஜுவல்லரி நான் கொள்ளையடித்த நகைகளை சிலர் போலீசாருக்கு பங்கு கொடுத்துள்ளேன். நகைகளை வாங்கிய போலீசாரின் பெயர்களில் சொல்ல விரும்பவில்லை.


வேலூர் சிறையில் தான் எனக்கும் கணேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவன் நகைகளை உருக்கி விற்பதில் கில்லாடி. இதனால் அவனை பங்குதாரராக சேர்த்துக் கொண்டேன். ஏழைகளின் வீடுகளிலும் கடைகளிலும் திருட மாட்டேன் நகை கடைகள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களில் தான் கைவரிசை காட்டினேன் என்று முருகன் விலாவாரியாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.





 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.