Skip to main content

கணவர் தற்கொலை; கதறி அழுத மனைவி

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

trichy issue husband son mother srirangam police 

 

திருச்சி திருவானைக்காவல் அகிலா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). இவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில், இத்தம்பதிக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளார்.  இவர்களுடன் கார்த்திகேயனின் தாயும் வசித்து வந்துள்ளார். கார்த்திகேயன் 3 ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு கார் டிரைவராக வேலைக்குச் சென்றார். அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அவரது மனைவி  தனியார் கார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

 

இந்நிலையில், நேற்று மாலை 6.45 மணியளவில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கார்த்திகேயனின் மனைவி, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாலும், நீண்ட நேரம் கதவைத் தட்டியும் யாரும் திறக்கவில்லை என்பதாலும் உடனே பக்கத்தில் உள்ளவர்களிடம் இது பற்றிக் கூறியுள்ளார். கல்லூரி மாணவர் ஒருவர் ஜன்னல் வழியாகப் பார்த்த போது, கார்த்திகேயன், அவரது தாய், அவரது மகன் ஆகியோர் தூக்குப்போட்ட நிலையில் சடலமாகத் தொங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர் கீழே இறங்கி வந்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கியவர்களின் உடல்களை மீட்டனர். அவர்களின் உடலைக் கண்ட  கார்த்திகேயனின் மனைவி கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து, இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில், “என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல. தாய், மகன் கஷ்டப்பட கூடாது என்பதற்காக அவர்களை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்” என கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

இந்தச் சம்பவம் குறித்து அவரது மனைவி  மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்பத் தகராறு காரணமாக கார்த்திகேயன், தாய் மற்றும் மகனைக் கொன்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.