திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விமான போக்குவரத்தானது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவர் பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்த 15 லட்சத்து 75 ஆயிரத்து 567ரூபாய் மதிப்புள்ள 281 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்புகாணப்பட்டது.